மதுரையில் திருமண வீட்டார் கொண்டு சென்ற நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

 
தமிழகம்

தேர்தல் காலகட்டத்தில் வரும் 7 சுப முகூர்த்த தினங்கள்: பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் நகை, பணம்

விழிப்புணர்வின்றி பரிதவிக்கும் திருமண வீட்டார்

செய்திப்பிரிவு

மதுரை: நடப்பு மாதம் அதி​களவு முகூர்த்த தினங்​கள் உள்ள நிலை​யில் திரு​மணத்​துக்​காக விழிப்​புணர்வு இன்றி எடுத்து செல்​லப்​படும் நகை, பணம் வாக​னச் சோதனை​யில் சிக்கி வரு​கின்​றன. நேற்று மதுரை அருகே சக்​குடி​யில் திரு​மணத்​துக்​காக கொண்டு செல்​லப்​பட்ட ரூ.27 லட்​சம் மதிப்​பிலான நகைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​துள்​ள​தால், பொது​மக்​கள் ரூ.50 ஆயிரத்​துக்கு மேல் கொண்டு செல்​லத் தடைவிதிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், ரூ.2 லட்​சத்​துக்கு மேல் ஆபரணங்​கள் கொண்டு செல்​ல​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

          

இந்த விதி​களை மீறு​வோர் மீது தேர்​தல் பறக்​கும் படை​யினர் நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கின்​றனர். அதன்​படி, மதுரை மாவட்​டத்​தில் உள்ள 10 தொகு​தி ​களி​லும் தேர்​தல் பறக்​கும் படை​யினர் தொடர்ந்து வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் நேற்று மதுரை கிழக்​குத் தொகு​திக்​குட்​பட்ட சக்​குடி - பூவந்தி சாலை​யில் வட்​டாட்​சி​யர் பாண்டி தலை​மையி​லான பறக்​கும் படை​யினர் வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது அவ்​வழி​யாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்​தனர். அதில், உரிய ஆவணங்​களின்றி ரூ.27 லட்​சம் மதிப்​பிலான 25 பவுன் நகைகள் எடுத்​துச் சென்​றது தெரிந்​தது.

இந்த நகைகளை மதுரை ஆனையூரைச் சேர்ந்த சரவணன் என்​பவர் தனது மகளின் திரு​மணத்​துக்​காகக் கொண்டு சென்​றார். ஆனால் நகைகளுக்​கான உரிய ஆவணங்​கள் இன்​றி, அவற்றை பறி​முதல் செய்​து, தேர்​தல் அலு​வலர் கருணாகரன் மூலம் அரசு கரு​வூலத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டது. சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி​யான ஏப்​.23 வரை 7 சுப முகூர்த்​தங்​கள் உள்​ளன. இந்த நாட்​களில் மாநிலம் முழு​வதும் ஆயிரக்​கணக்​கான திரு​மணங்​கள் நடக்க உள்​ளன. இதற்​காக

ஏற்​கெனவே நகைகள், புத்​தாடைகள் வாங்கி வைத்​தவர்​களுக்கு பிரச்​சினை இல்​லை. அதை தவிர்த்​து, தற்​போது உரிய ஆவணம் இன்றி நகைகள், புத்​தாடைகள் வாங்​கிச் செல்​வோர் சிரமத்தை சந்​திக்​கிறார்​கள்.

கைப்​பற்​றப்​பட்ட நகை, பணத்தை தேர்​தல் அலு​வலர்​களிடம் இருந்து திரும்ப மீட்​பது சிரம​மான காரி​யம். அதனால் நகை, பணம் போன்​றவற்றை எடுத்​துச் செல்​பவர்​கள் அதற்​கான ஆவணங்​களை உடன் எடுத்​துவர தேர்​தல் அலு​வலர்​கள் கிராமங்​கள், நகரங்​களில் போதிய விழிப்​புணர்வு செய்ய வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்​ளது.

SCROLL FOR NEXT