தமிழகம்

பரிசுப் பொருட்களை கொண்டு செல்வதைத் தடுக்க புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: புறநகர் மின்​சார ரயில் பகு​தி​களில் பரிசுப் பொருட்​கள் கொண்டு செல்​லப்​படு​வதை தடுக்​கும் வகை​யில், 24 மணி நேர கண்​காணிப்பு தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

சென்னை சென்ட்​ரல், எழும்​பூர் ரயில் நிலை​யங்​களில் ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் தேர்​தல் கண்​காணிப்பு சிறப்​புப் பிரிவை ஏற்​படுத்​தி, கடந்த 3 வாரங்​களில் ரூ.1.60 கோடி தங்​கக்​கட்​டிகள், ரூ.11.66 கோடி வெள்ளி கட்​டிகள், ரூ.1.50 கோடி பணம் ஆகிய​வற்றை கைப்​பற்​றி​யுள்​ளனர்.

          

இதற்​கிடை​யில், புறநகர் மின்​சார ரயில்களில் தேர்​தலுக்​கான பரிசுப் பொருட்​கள் கொண்டு செல்ல வாய்ப்பு இருப்​ப​தாகத் தகவல் வெளி​யானது. இதையடுத்து சென்ட்​ரல், எழும்​பூர் உள்​ளிட்ட ரயில் நிலை​யங்​களின் புறநகர் மின்​சார ரயில் வளாகப் பகு​தி​யில் 24 மணி நேர​மும் கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் மூலம் ரயில்களின் வரு​கை, பயணி​கள் நடவடிக்கை ஆகிய​வற்​றைக் கண்​காணிக்​கும் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ரயில்வே போலீ​ஸார் கூறிய​தாவது: சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​திலிருந்தோ வெளியூர்​களி​லிருந்து வரும் புறநகர் மின்​சார ரயில்கள் மூலமோ தேர்​தலுக்​கான பரிசுப் பொருட்​கள் கொண்டு செல்​வதைத் தடுக்​கும் கண்​காணிப்​பைத் தீவிரப்படுத்​தி​யுள்​ளோம்.

அதற்காக 4 பேர்கொண்ட 2 சிறப்பு கண்காணிப் ​புக்குழு​வை​யும் அமைத்துள்ளோம். அந்​தக் குழு​வினர் கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் மூலம் காட்​சிகளை ஆய்​வுக்கு உட்​படுத்தி சந்​தேக பயணி​கள் குறித்து தகவல் தெரி​விப்​பர்.

அந்த தகவலின்​படி, சம்​பந்​தப்​பட்ட பயணி​களை சோதனை​யிட்டு வரு​கிறோம். கடந்த 2 நாட்​களில் தினசரி 220 புறநகர் மின்​சார ரயில் சேவை​களை கண்​காணித்து வரு​கிறோம். இது​போல, எழும்​பூர் ரயில் நிலை​யத்​தி​லும் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT