தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர் வரத்து கடந்த 3 நாட்களாக விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்தது.
இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்றைய அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.