வெளி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றனர்.

 
தமிழகம்

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

Guest Author

சென்னை: பழங்​குடி​யினர் நலத்​ துறை​யின் கீழ் 36 உண்டு உறை​விட அரசுப் பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இங்கு பயிலும் மாணவர்​கள்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, எம்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்​கல்வி நிறு​வனங்​களில் சேரும் வகையில் நீட், ஜேஇஇ, கிளாட், ஐஎம்யு போன்ற போட்டி தேர்​வு​களில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்​சிகளை பழங்​குடி​யினர் நலத் ​துறை வழங்கி வரு​கிறது.

அதன்​படி, இந்​த ஆண்டு 357 மாணவர்​கள் பல்​வேறு மாநிலங்​களில் படிக்கச் சென்​றுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இதுகுறித்து ‘குமிழி’ அரசு பயிற்சி மையத்​தின் தலைமை ஆசிரியர் சுமதி கூறிய​தாவது: பல தடைகளையும் தாண்டி வெளிவருவது மாணவர்​களுக்கு சவாலான ஒன்​று.

அதை தாண்டி படிக்க அவர்​களுக்கு ஊக்​கமளித்து வழிநடத்திச் செல்​கிறோம். அதன்​படி, வாசுகி பவுண்​டேஷனுடன் இணைந்து மாணவர்​களுக்கு பயிற்​சி​அளித்து வரு​கிறோம்.

42 போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளித்து, எங்​களது மாணவர்​கள் ஐஐடி, எம்ஐடி, நிஃப்ட், என்​ஐடி ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்​ளனர்.

இந்​த ஆண்டு ஆதி​தி​ரா​விடர் மாணவர்​கள் 80 பேர், பழங்​குடி​யின மாணவர்​கள் 277 பேர் போட்டித் தேர்​வில் வென்று படிக்கச் சென்​றுள்​ளனர்.

கமலேஷ்

முதல் முறை​யாக ராஜீவ் காந்தி நேஷனல் ஏவி​யேஷன் பல்​கலைக்​கழகத்​தில் பழங்​குடி​யின மாணவர் ஒரு​வர் படிக்கத் தேர்​வாகி உள்​ளார். தேசிய சட்டப் பல்​கலைக்​கழகத்​தில் இருளர் சமூகத்தை சேர்ந்த மாணவர் சேர்க்கை பெற்றுள்​ளார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

கேரள ஐஐஐடி​யில் சேர்ந்​துள்ள மாணவர் கமலேஷ் கூறி​ய​தாவது: எனது சொந்த ஊர் சேலம் மாவட்​டம் கெங்​கவல்லி கிராமம். பெற்​றோர் இரு​வரும் விவ​சாய கூலித் தொழிலா​ளர்கள்.

நான் பள்ளியில் படிக்​கும் போதே, உயர்கல்வி நிறு​வனத்​தில் சேர வேண்டும் என்று பழங்​குடி​யின நலத்​துறை ஆணை​யர் அண்​ணாதுரை ஊக்கப்படுத்தி​னார்.

அதே​போல, சமூகநீதி துறை செயலர் சுப்​பையன் வழி​காட்​டு​தல்​படி, ‘குமிழி’ பயிற்சி மையம் மூலம் பயின்று ஜேஇஇ தேர்​வில் 78 சதவீதம் பெற்று கேரள​மாநிலம் கோட்​ட​யத்​தில் உள்ள ஐஐஐடி நிறு​வனத்​தில் பி.டெக் படித்து வரு​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதுகுறித்து சமூகநீ​தி துறை அமைச்​சர் வன்​னியரசு கூறிய​போது, “முதல்முறை​யாக ஏவி​யேஷன் துறை​யில் எங்கள் மாணவர்கள் தடம் பதித்ததில் மகிழ்ச்​சி.

இடஒதுக்​கீட்டை தாண்டி மாணவர்​கள் சேர்க்கை அதி​கரித்​துள்​ளது. முதல்​வரின் ஆணைப்​படி, இடைநிற்​றல் மாணவர்​கள் மீதும் கவனம் செலுத்தி நல்​வழிப்​படுத்​தும் பணி​களில்​ அரசு தொடர்ந்​து ஈடு​பட்​டு வரு​கிறது” என்​றார்​.

- மணிகண்டன் ஆறுமுகம்

SCROLL FOR NEXT