கோப்புப்படம்

 
தமிழகம்

மின்வாரிய ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: மின் பகிர்​மான கழக ஓய்​வூ​தி​யர்​களுக்கு அகவிலைப்​படி 58 சதவீத​மாக உயர்த்தப்பட்டது.

இதுகுறித்து மின்​வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் பிறப்​பித்த உத்தர​வு: தமிழக அரசு ஓய்​வூ​தியர்கள் மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யர்​களுக்கு அகவிலைப்​படியை 58 சதவீத​மாக உயர்த்​தி​யது. இந்த ஆணையை பின்​பற்றி தமிழ்​நாடு மின்​பகிர்​மான கழக ஓய்​வூ​தி​யர்​கள் மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யர்​களுக்​கும் 2025 ஜூலை 1 முதல் அகவிலைப்​படியை 58 சதவீத​மாக உயர்த்தி வழங்க ஆணை​யிட்​டுள்​ளது.

அகவிலைப்​படி நிலு​வைத் தொகையை பணமில்லா பரிவர்த்​தனை முறை மின்​னணு தீர்வு சேவை மூலம் நவம்​பர் மாத ஓய்​வூ​தி​யத்​துடன் வழங்​கப்​படும்.

SCROLL FOR NEXT