தமிழகம்

கேஎம்சி மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கு இனி அடையாள அட்டை

செய்திப்பிரிவு

சென்னை: கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி​களை பார்க்க வரும் பார்​வை​யாளர்​களுக்கு அடை​யாள அட்டை வழங்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது.

சென்னை கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனை வளாகத்​தில் நேற்று முன்​தினம் தூங்​கிக் கொண்​டிருந்த ரவுடியை ஒரு கும்​பல் வெட்​டிக் கொலை செய்​தது.

இந்த சம்​பவம், அங்கு சிகிச்சை பெறும் நோ​யாளி​கள், பார்​வை​யாளர்​கள், மருத்​து​வர்​கள், செவிலியர்​கள், மருத்​து​வப் பணி​யாளர்​கள் என அனை​வரை​யும் அதிர்ச்​சி​யடைய செய்​தது. மருத்துவமனையில் பாது​காப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்​கு​மாறு சுகா​தா​ரத் துறை செயலர் அறி​வுறுத்​தி​னார்.

அதன்​படி மருத்துவமனை டீன் கவி​தா, ஆர்​எம்ஏ வாணி எடுத்த நடவடிக்​கை​யின்​படி, நோ​யாளி​களை பார்க்க வருபவர்​களுக்​கு, பார்​வை​யாளர் நேரத்​தில் அடை​யாள அட்டை வழங்​கும் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக டீன் கவி​தா, ஆர்​எம்ஓ வாணி கூறுகை​யில், ``மருத்துவமனையில் நோ​யாளி​கள் மற்​றும் உதவி​யாள​ருக்கு ஏற்​கெனவே அடை​யாள அட்டை வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதில் நோ​யாளி பெயர், வயது, தொடர்பு எண் உள்​ளிட்ட விவரங்​கள் இடம் பெற்​றிருக்​கும்.

ஒரு நோயாளிக்கு ஒரு நபர்: தற்​போது நோ​யாளியை சந்​திக்க வரும் மற்ற நபர்​களுக்​கும், நோ​யாளி சிகிச்சை பெறும் துறை சார்ந்த குறி​யீட்​டுடன் கூடிய அடை​யாள அட்டை வழங்​கப்​படு​கிறது. ஒரு நோ​யாளிக்கு ஒரு நபர் என்ற அடிப்​படை​யில் வழங்​கப்​படு​கிறது'' என்​றார்​.

SCROLL FOR NEXT