தமிழகம்

‘நான் எந்த தவறும் செய்யவில்லை’ - சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பி.ஆர்.பாண்டியன் விளக்கம்

செய்திப்பிரிவு

திருச்சி: தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழுத் தலை​வ​ரான பி.ஆர். பாண்​டியன், திரு​வாரூரில் மத்​திய அரசின் பொதுத் துறை நிறு​வன​மான ஓஎன்​ஜிசி நிறுவன சொத்​துகளை சேதப்​படுத்​தி​ய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், திரு​வாரூர் நீதி​மன்​றம் அவருக்கு அண்​மை​யில் 13 ஆண்​டு​கள் சிறைத்​தண்​டனை விதித்​தது.

அதைத்​தொடர்ந்​து, திருச்சி மத்​திய சிறை​யில் பி.ஆர்​.​பாண்​டியன் அடைக்​கப்​பட்​டார். பின்​னர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல் முறை​யீடு செய்​த​தில், அவரது தண்​டனையை உயர் நீதி​மன்​றம் நிறுத்தி வைத்​தது. இதையடுத்​து, திருச்சி மத்​திய சிறை​யில் இருந்து பி.ஆர்​.​பாண்​டியன் நேற்று விடுவிக்​கப்​பட்​டார்.

அவரை, தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்​க தலை​வர் அய்​யாக்​கண்​ணு, தமாகா விவ​சாய அணி மாவட்​டத் தலை​வர் புங்​க​னூர் செல்​வம் உள்​ளிட்ட விவ​சாய சங்​கப் பிர​தி​நி​தி​கள் வரவேற்​றனர்.

அதைத்​தொடர்ந்​து, திருச்சி மத்​திய பேருந்து நிலை​யம் பகு​தி​யில் உள்ள காம​ராஜர் சிலைக்​கு​ மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​யபின் செய்​தி​யாளர்​களிடம் பி.ஆர்​.​பாண்​டியன் கூறும்​போது, ‘‘ஓஎன்​ஜிசி நிறுவன சொத்​துகளை சேதப்​படுத்​தி​ய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், நான் எந்​தகுற்​ற​மும் செய்​ய​வில்​லை.

அந்​ததொழிற்​சாலை தீப்​பிடித்து எரிந்​ததற்​கும், எனக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. சம்​பவம் நடந்த மறு​நாள்​தான் நான் அங்கு சென்​றேன்’’ என்​றார்.

விவ​சாய சங்​கத் தலை​வர் அய்​யாக்​கண்ணு கூறும்​போது, ‘‘விவ​சா​யிகள் மீது ஏராள​மான வழக்​கு​கள் தொடுக்​கப்​பட்​டுள்​ளன. அவற்றை தமிழக அரசு வாபஸ்​ பெற வேண்​டும்​’’ என்​றார்​.

SCROLL FOR NEXT