இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம்

 
தமிழகம்

உதயநிதியின் சனாதன பேச்சை கண்டித்து 17-ம் தேதி 4 நகரங்களில் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

கோவை: எ​திர்க்கட்​சித் தலை​வர் உதயநி​தி​யின் சனாதன பேச்சை கண்​டித்​து, 17-ம் தேதி சென்​னை, கோவை உள்பட 4 நகரங்​களில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் தெரி​வித்​தார்.

கோவை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தின் 17-வது சட்​டப்பேர​வை​யின் புதிய கூட்​டத்​தில் எதிர்க்​கட்​சித் தலை​வ​ரான உதயநிதி ஸ்டா​லின் தனது உரையை முடிக்​கும் முன்பு சனாதன தர்​மத்தை ஒழிப்​போம் என்று பேசி​யுள்​ளார். உதயநி​தி​யின் இந்த பேச்சு சட்​டப்​பேர​வை​யின் மாண்​பை​யும், மரபை​யும் அவம​திப்​ப​தாகும். ஏற்​கெனவே ஒரு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​று, சனாதனத்தை டெங்​கு, மலேரியா கொசு போல் ஒழிக்க வேண்​டும் என பேசி​யுள்​ளார்.

இது தொடர்​பாக வழக்கு தொடுக்கப்​பட்​டு, அவர் நீதி​மன்ற பிணை​யில்தான் இருக்​கிறார். முதல்​வர் விஜய் தனது பதவி​யேற்பு விழா​வில் இந்​து, முஸ்​லிம், கிறிஸ்​தவர்​கள் என இந்த அரசு பாகு​பாடு காட்​டாது என பேசி​யிருந்​தார். அனைத்து வகை மக்​களின் பிர​தி​நி​தி​யாக எம்​எல்​ஏ​வாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட உதயநிதி ஸ்டா​லின், மத நல்​லிணக்​கத்தை பேணுவதற்கு பதிலாக இந்து மத, சனாதன வெறுப்பைத் தூண்​டும் வகை​யில் பேசி​யிருப்​பது சபை மரபை மீறு​வ​தாகும். உதயநிதி ஸ்டா​லினின் இந்து விரோத பேச்சை கண்​டித்து மே 17-ம் தேதி கோவை, திருப்​பூர், சென்னை மற்​றும் மதுரை ஆகிய 4 நகரங்​களில் இந்து முன்​னணி சார்​ பில் ஆர்ப்பாட்​டம் நடை​பெறும்.

சட்​டப்​பேர​வை​யில் நிதி​நிலை குறித்த வெள்ளை அறிக்​கையை முதல்​வர் வெளி​யிடும்​போது, இந்து கோயில்​கள் பற்​றிய வரு​மானம், சீரமைப்பு உள்​ளிட்​ட​வற்றை குறிப்​பிட வேண்​டும். உருக்​கப்​பட்ட கோயில் நகை விவரங்​களும் இடம்​பெற வேண்​டும். தமிழக அரசு மதுக்​கடைகளை குறைத்​திருப்​பதை வரவேற்​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT