மதுரையில் பூர்ணசந்திரன் படத்துக்கு அஞ்சலி செலுத்திய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

 
தமிழகம்

திமுக அரசுக்கு தேர்தலில் முருக பக்தர்கள் பதிலடி கொடுப்பார்கள்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் விமர்சனம்

செய்திப்பிரிவு

மதுரை: ​திமுக அரசுக்கு முருக பக்​தர்​கள் பதிலடி கொடுப்​பார்​கள் என்று இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் கூறி​னார். திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்ற வலி​யுறுத்தி உயி​ரிழந்த பூர்ண சந்​திரனின் 16-ம் நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வு நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற காடேஸ்​வரா சுப்​ரமணி​யம், பூர்​ணசந்​திரன் படத்​துக்கு மலர்​கள் தூவி அஞ்​சலி செலுத்​தி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்​றக்​கோரி தன்​னையே தியாகம் செய்த பூர்ண சந்​திரன் குடும்​பத்​துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்​பீடு மற்​றும் அவரது மனை​விக்கு அரசுப் பணி வழங்க வேண்​டும்.

பூர்ண சந்​திரன் கடவுள் இல்லை என்று கூறிய பெரி​யார் சிலை முன்பு தனது உயிரைத் தியாகம் செய்​துள்​ளார். அவரது தியாகம் வீண் போகாது. திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றும் வகை​யில் அரசு தீபம் ஏற்ற வேண்​டும். ஏற்​றத் தவறி​னால், இந்து முன்​னணி​யினர், முருக பக்​தர்​கள், பொது​மக்​கள் இணைந்து மலை உச்​சி​யில் தீபத்​தூணி​ல் தீபம் ஏற்​று​வோம்.

இந்து கோயில்​கள், இந்து கடவுள்​கள், இந்து பெண்​கள் குறித்து திரு​மாவளவன் அவதூறு பேசி​யுள்​ளார். திமுக எம்​.பி. கனி​மொழி​யும் முருக பக்​தர்​களை கொச்​சைப்​படுத்தி வரு​கிறார். இவர்​களுக்கு முருக பக்​தர்​கள் தேர்​தலில் பதிலடி கொடுப்​பார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT