தமிழகம்

சிறையில் அடைக்கப்பட்ட 28 வங்கதேசத்தினரை சொந்த நாட்டுக்கு அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ​திருப்​பூர் மாவட்​டம் பல்​லடத்​தில் சட்​ட​விரோத​மாக தங்கி பனியன் நிறு​வனத்​தில் வேலை செய்​த​போது கைது செய்​யப்​பட்ட 28 வங்​கதேச தொழிலா​ளர்​களை சென்னை உயர் ​நீ​தி​மன்​றம் விடு​தலை செய்​துள்​ளது.

திருப்​பூர் மாவட்​டத்​தில் செயல்​பட்டு வரும் தனி​யார் பனியன் நிறு​வனங்​களில், வங்கதேசத்​தைச் சேர்ந்​தவர்​கள், சட்​ட​விரோத​மாக தங்கி பணிபுரிந்து வரு​வ​தாக, பல்​லடம் போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன்​பேரில், சோதனை நடத்​தியதில் கடந்​தாண்டு ஜன.12-ம் தேதி வங்​கதேசத்​தைச் சேர்ந்த முகமது சலீம், ஆஷிக், முகமது ஆரீப் அலி உள்பட 28 பேரைபோலீஸார் கைது செய்தனர்.

          

இதையடுத்​து, 28 பேர் மீது வெளி​நாட்​டினர் சட்​டப்​பிரி​வின்​கீழ், போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இந்த வழக்​கு, திருப்​பூர் மாவட்ட 2-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடந்து வந்​தது. வழக்கை விசா​ரித்த நீதிபதி பாஸ்​போர்ட், விசா உள்​ளிட்ட சட்​டரீ​தி​யான ஆவணங்​கள் இன்​றி, இந்​திய நாட்​டுக்​குள் நுழைந்​தது நிரூபிக்​கப்​பட்டு உள்​ளதாகக் கூறி, 28 பேருக்கும், தலா 2 ஆண்டு சிறை தண்​டனை​யும், தலா ரூ.10 ஆயிரம் அபராத​மும் விதித்​து, கடந்​தாண்டு ஜூலை 17-ல் தீர்ப்​பளித்​தார்.

இதை எதிர்த்​து, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 28 பேரும் மேல்​முறை​யீடு செய்​தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்​தர்​மோகன் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எஸ்​.ஷைனி, மேல்​முறை​யீட்​டாளர்​கள் அனை​வரும் இது​வரை அனுப​வித்த சிறை​வாசம், இந்த குற்​றங்​களுக்கு போது​மானது. எனவே, தண்​டனையை குறைக்க வேண்​டும்" என வாதிட்​டார்.

காவல்​துறை தரப்​பில், தகுந்த ஆதா​ரங்​களு​டன் காவல்​துறை நிரூபித்​துள்​ளது. அதை பரிசீலித்​தே, விசா​ரணை நீதி​மன்​றம் தண்​டனை விதித்​துள்​ளது. அதில்தலை​யிட எந்த காரணமும் இல்​லை" எனத் தெரிவிக்க​ப்பட்​டது.

இருதரப்பு வாதங்​களை கேட்ட நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: மனு​தா​ரர்​களின் குடும்ப உறுப்​பினர்​கள் வங்​கதேசத்​தில் வசித்து வரு​வ​தால், தாங்​கள் அனை​வரும் சொந்த நாட்​டுக்கு திரும்​புவ​தாக விருப்பம் தெரிவித்​துள்​ளனர். எனவே, விசா​ரணை நீதி​மன்ற வழங்கிய தண்​டனை மாற்றி அமைக்​கப்​படு​கிறது. மனு​தா​ரர்​கள் அனை​வரும் ஓராண்​டுக்கும்மேலாக காவலில் இருப்​ப​தால், ஏற்கெனவே அனுப​வித்த சிறைத் தண்​டனையே போது​மானதாக நீதி​மன்​றம் கருதுகிறது.

எனவே, அனை​வரை​யும் விடு​தலை செய்​கிறேன். முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டு, சட்ட நடை​முறை​களுக்குப் பின் அனை​வரை​யும் அவர்​களின் சொந்த நாட்​டுக்கு அனுப்பி வைக்க வேண்​டும். சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் இந்த நடை​முறையை, 3 மாத காலத்​துக்​குள் முடிக்​க வேண்​டும்​. இவ்​வாறு உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT