தமிழகம்

பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநரை அவமதிப்பது சரியல்ல: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: ‘பட்டமளிப்பு விழாக்​களில் ஆளுநரை அவம​திப்​பது சரியல்ல. இதைத் தவிர்க்​கும் வகை​யில் வழி​காட்டு நெறி​முறை​களை வகுக்க வேண்​டும்’ என உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​தனர்.

தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: நெல்லை மனோன்​மணீ​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழகத்​தின் 32-வது பட்டமளிப்பு விழா கடந்த ஆக.13-ம் தேதி நடந்​தது. இந்த விழா​வில் மாணவ, மாணவி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி பட்​டங்​களை வழங்​கி​னார்.

குமரி மாவட்​டத்​தைச் சேர்ந்த மாணவி ஜீன் ராஜன் என்​பவர் ஆளுநரிடம் இருந்து பட்​டம் பெற மறுத்து துணை வேந்​தரிடம் இருந்து பட்​டம் பெற்​றார். பல்​கலைக்​கழகச் சட்​டப்​படி வேந்​தர்​தான் பல்​கலைக்​கழகத்​தின் தலை​வர். வேந்​தர் இல்​லாத​ போது​தான் துணை வேந்​தர் பட்​டங்​களை வழங்க முடி​யும். பல்​கலைக்​கழக வேந்​த​ரான ஆளுநரிடம் பட்​டம் பெற மறுத்​தது சட்ட மீறல் ஆகும்.

பட்​டம் பெற மறுத்​தது தொடர்​பாக அந்த மாணவி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​போது, தமிழகத்​துக்கு ஒன்​றும் செய்​யாத ஆளுநரிடம் நான் ஏன் பட்​டம் வாங்க வேண்​டும் எனக் குறிப்​பிட்​டிருந்​தார். பல்​கலைக்​கழகப் பட்டமளிப்பு விழா அரசி​யல் போராட்​டத்​துக்​கான களம் அல்ல.

அந்த மாணவி துணைவேந்​தரிடம் இருந்து பெற்ற பட்​டம் செல்​லத்​தக்​கது அல்ல. எனவே, பட்​டத்தை ரத்து செய்​தும், அது​வரை பட்​டத்​தின் செல்​லுபடியாகும் தன்மைக்கு இடைக்கால தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு விசா​ரணைக்கு உகந்​த​தா? இல்​லை​யா? என்ற பட்​டியலில் நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்​வில் நேற்று விசாரணைக்கு வந்​தது.

அப்போது நீதிப​தி​கள், பல்​கலைக்​கழகப் பட்டமளிப்பு விழா​வில், ஆளுநரை அவம​திக்​கும் வகை​யில் மாணவி நடந்து கொண்​டது ஏற்​புடையதல்ல. இதை ஒரு​போதும் ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இதற்​குரிய வழி​காட்டு நெறி​முறை​களை வகுக்க வேண்​டும்.

பல்​கலைக்​கழகத்​தின் மாண்​பைக் காக்க வேண்​டும். இது குறித்து இளைய தலை​முறைகளுக்கு உரிய வழி​காட்ட வேண்​டும். பல்​கலைக்​கழக விதிப்​படி மாணவியைப் போல் செயல்​பட்​டவர்​கள் மீது துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்​ள​தா? என மனு​தா​ரரும், பல்​கலை.வழக்​கறிஞரும் பதில் மனுத் தாக்​கல் செய்ய உத்​தர​விட்டு விசா​ரணையை டிச.18-க்கு தள்​ளி​வைத்​தனர்.

SCROLL FOR NEXT