தமிழகம்

மாற்றுத் திறனாளிகள் மீதான தாக்குதல் மிகத் தீவிரமானது: காவல் துறையின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாற்​றுத் திற​னாளி​கள் மீதான தாக்​குதல் மிகத் தீவிர​மானது என காவல் துறைக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்​றம், இது தொடர்​பாக எழும்​பூர் காவல் உதவி ஆணை​யர் பதிலளிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழ்​நாடு அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி​கள் பாது​காப்பு மற்​றும் உரிமை​களுக்​கான சங்​கத்​தின் மாநில பொதுச்செய​லா​ள​ரான பா.ஜான்​சி​ராணி சென்னை உயர் நீதிமன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “தமிழகம் முழுவது​மிருந்து சுமார் 1,800 மாற்​றுத் திற​னாளி​கள் கடந்த பிப்​.17 அன்று சென்னை சேப்​பாக்​கம் சிவானந்தா சாலை​யில் அமை​தி​யாக கூடி பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஜனநாயக முறை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டோம்.

          

அப்​போது அங்கு வந்த எழும்​பூர் காவல் உதவி ஆணை​யர் ஜெகதீசன், காவல் ஆய்​வாளர் பிர​காஷ் ஆகியோர் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாற்​றுத்

திற​னாளி​களிடம் ராஜரத்​தினம் ஸ்டேடி​யம் பகு​திக்​குச் சென்று போராட அறி​வுறுத்​தினர். அதன்​படி அங்கு சென்று அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டோம்.

ஏப்​.21-க்கு தள்​ளி​வைப்பு

பின்​னர் இரவு 8 மணி​யள​வில் திரு​மங்​கலத்​தில் உள்ள திருமண மாளி​கை​யில் தங்​கவைப்​ப​தாகக் கூறி 20-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகளில் ஏற்​றிச்​சென்று அடிப்​படை வசதி​கள் இல்​லாத பல்​வேறு இடங்​களில் அடைத்து வைத்து சித்​ர​வதை செய்​தனர்.

கால்​களை இழந்த மாற்​றுத் திற​னாளி​யான என்னை போலீ​ஸார் பேருந்​தில் தூக்​கிப்​போட்டு கைகளை முறுக்​கினர். மயக்​க​முற்ற என்னை மருத்​து​வ​மனை​யில் கூட சேர்க்​க​வில்​லை.

பின்​னர் அங்​கிருந்​தவர்​களின் உதவி​யுடன் ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனை அவசர சிகிச்​சைப் பிரி​வில் சேர்க்​கப்​பட்டு சிகிச்சை பெற்​றேன். மாற்​றுத் திற​னாளி​களுக்கு எதி​ராக கடுமை​யாக நடந்து கொண்ட காவல் துறை அதி​காரி​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும்.

பாதிக்​கப்​பட்ட எங்​களுக்கு ரூ.25 லட்​சம் இழப்​பீடு வழங்க உத்​தர​விட வேண்​டும். எழும்​பூர் காவல் உதவி ஆணை​யர் ஜெகதீசன் மற்​றும் காவல் ஆய்​வாளர் பிர​காஷ் ஆகியோரை இடைநீக்​கம் செய்ய உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்​. நிர்​மல்​கு​மார் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி, போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாற்​றுத் திற​னாளி​கள் மீது காவல் துறை தாக்​குதல் நடத்​தி​ய​தாக கூறப்​படும் குற்​றச்​சாட்டு மிகத் தீவிர​மானது எனக் கண்​டனம் தெரி​வித்​தார்.

பின்​னர் இது தொடர்​பாக எழும்​பூர் காவல் உதவி ஆணை​யர் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை ஏப்​.21-க்கு தள்​ளி​வைத்​துள்​ளார்.

SCROLL FOR NEXT