சென்னை: போக்குவரத்து ஆணையர் கிரண் குணராலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (ஜன.12 முதல் 18-ம் தேதி வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால், அதனைத் தடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151, இணைப் போக்குவரத்து ஆணையரகங்கள் - சென்னை (வடக்கு) 99442 53404, சென்னை (தெற்கு) 97905 50052, மதுரை 90953 66394, கோவை 91235 93971, துணைப் போக்குவரத்து ஆணையரகங்கள் - விழுப்புரம் 96773 98825, வேலூர் 98400 23011, சேலம் 78456 36423, ஈரோடு 80569 40040, திருச்சி 90660 32343, விருதுநகர் 90257 23800, திருநெல்வேலி 96981 18011, தஞ்சாவூர் 95850 20865 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.