தமிழகம்

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு குறையும்

செய்திப்பிரிவு

சென்னை: வட தமிழக கடலோரப் பகு​திகளில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் இன்று காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறை​யும். இதன் காரணமாக சென்னை உள்​ளிட்ட 4 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்​பாக வானிலை ஆய்வு மைய இயக்​குநர் பா.செந்​தாமரை கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: ‘டிட்​வா’ புயல் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலு குறைந்​து, தென்​மேற்கு வங்​கக்​கடல் மற்​றும் அதனை ஒட்​டிய மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகு​திகள், வட தமிழகம் மற்​றும் தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களில், சென்​னைக்கு தென்​கிழக்கே சுமார் 50 கி.மீ தொலை​வில் நீடித்து வரு​கிறது. இது இன்று (டிச.2) காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலு குறைந்​து, வட தமிழகம் மற்​றும் தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு இணை​யாக வடக்கு நோக்கி நகர்ந்​து, தென்​மேற்கு மற்​றும் அதனை ஒட்​டிய மத்​திய மேற்கு வங்​கக்​கடலில் நில​வக்​கூடும்.

அப்​பொழுது, சென்​னையி​லிருந்து காற்​றழுத்த தாழ்வு மண்​டலத்​துக்கு இடையி​லான குறைந்​த​பட்ச தூரம் 30 கி.மீ ஆக இருக்​கக்​கூடும். இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களி​லும், 3 முதல் 7-ம் தேதி வரை ஒருசில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழைபெய்யும்.

சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சி, செங்​கை மாவட்​டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ளது. தமிழக கடலோரப் பகு​தி​கள், குமரிக்​கடல் மற்​றும் மன்​னார் வளை​குடா பகு​தி​களில் இன்று காலை முதல் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்​தில் சூறாவளிக்​காற்று வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீன வர்​கள் செல்ல வேண்​டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT