தமிழகம்

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்ததாக குற்றச்சாட்டு: பேரவையில் காரசார விவாதம்

செய்திப்பிரிவு

சென்னை: ​தி​முக ஆட்​சி​யில் விலை​வாசி உயர்வு அதி​கரித்​து​விட்​டது என்ற குற்​றச்​சாட்டு தொடர்​பாக சட்​டப்பேரவையில் எதிர்க்​கட்சி துணை தலை​வர் ஆர்.பி.உதயகுமார்- அமைச்​சர்​கள் இடையே கார​சார விவாதம் நடந்​தது.

உதயகு​மார்: ஆளுநர் உரை​யில், விலை​வாசி உயர்வை கட்​டுப்​படுத்த எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து எந்த குறிப்​பும் இடம்​பெற​வில்​லை. அதி​முக ஆட்​சியில் கிலோ ரூ.45-க்கு விற்​கப்​பட்ட அரிசி இப்போது ரூ.75-க்கு உயர்ந்​துள்​ளது.

          

உணவுத்​துறை அமைச்​சர் சக்​ர​பாணி: திமுக ஆட்​சிக்​காலத்​தில் நெல் கொள்​முதல் விலை அதி​கரித்​துள்​ளது. அதன் காரண​மாக அரிசி விலை உயர்ந்​திருக்​கலாம்.

பொதுப்​பணித் துறை அமைச்​சர் எ.வ.வேலு: விலை​வாசி உயர்​வுக்கு ஜிஎஸ்​டி​தான் காரணம். தமிழகத்​தில் தனி​நபர் வரு​மானம் ரூ.3.15 லட்ச​மாக உயர்ந்துள்​ளது. விலைவாசி உயர்ந்​தா​லும் அது கட்​டுக்குள் இருக்​கிறதா என்​பதே முக்​கி​யம்.

உதயகு​மார்: அதி​முக ஆட்​சிக் காலத்​தில் விலை​வாசி உயர்வை கட்​டுப்​படுத்த விலை நிலைப்​படுத்​தும் நிதி ரூ.100 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது.

கூட்​டுறவுத்​ துறை அமைச்​சர் பெரியகருப்​பன்: இப்​போதும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்​பட்​டுள்​ளது.

உதயகு​மார்: தனிநபர் கடனும் ரூ.1.26 லட்​ச​மாக உயர்ந்துள்ளது.

சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன்: திமுக ஆட்​சி​யில் பொருளா​தார வளர்ச்சி இரட்டை இலக்​கமாக அதி​கரித்து 11.19 சதவீதத்தை எட்​டியுள்​ளது. தேசிய சராசரி வளர்ச்​சிகூட 6.6 சதவீதம்​தான் என்றார்.

தொடர்ந்து உதயகு​மார் பேசும்​போது, "நிரந்தர டிஜிபி நியமிக்​கப்​ப​டாத​தால் தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கொலை, பாலியல் குற்​றம்

அதி​கரித்திருப்பதாக கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்​சர் சிவசங்​கர், தனி​நபர் மோதலை வைத்து சட்​டம் ஒழுங்கு பாதித்ததாக சொல்​லக் கூடாது என்றார்.

தொடர்ந்து உதயகு​மார் பேசும்போது, "20 லட்​சம் மடிக்​ கணினி வழங்​கப்​படும் என்று சொன்னீர்​கள். தற்​போது 10 லட்​ச​மாக சுருங்​கி​விட்​டது" என்றார். இதற்கு அமைச்​சர் கோவி.செழி​யன் பதிலளிக்​கும்​போது, "அரசு, உதவி பெறும் கல்லூரி​ மாணவர்​களுக்கு மட்​டுமின்றி தனி​யார் கல்​லூரி மாணவர்களுக்கும் மடிக்​க​னினி வழங்​கி​யுள்​ளோம். அடுத்த ஆண்​டில் முதலாண்டு மாணவர்​களுக்​கும்​ மடிக்​கணினி வழங்​கப்​படும்​" என்றார்​.

SCROLL FOR NEXT