தமிழகம்

சுகாதாரத் துறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: சட்டப்போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: சர்​வ​தேச தரத்​துக்கு தமிழக சுகா​தா​ரத் துறையை கொண்டு செல்ல கட்​டமைப்பை மேலும் வலுப்​படுத்த வேண்​டும் என்​று, அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சுகா​தார குறி​யீடு​களில் இப்​போதும் தமிழகம் தான் முன்​னிலை வகிக்​கிறது. அதற்கு நம் சுகா​தா​ரத் துறை​யின் வலு​வான கட்​டமைப்பு தான் காரணம்.

          

சர்​வ​தேச தரத்​துக்கு நம் சுகா​தா​ரத் துறையை கொண்டு செல்ல வேண்​டுமென்​றால், கட்​டமைப்பை மேலும் வலுப்​படுத்த தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் அரசு செய்ய வேண்​டும்.

அரசு மருத்​து​வ​மனை​களுக்கு வரும் நோயாளி​கள் எண்​ணிக்கை 3 மடங்​காக அதி​கரித்​துள்​ளநிலையில், அதற்கு ஏற்​ப மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் பணி​யிடங்​களை அதி​கரிக்​கப்படவில்லை. தமிழகத்​தில் 19 ஆயிரம் அரசு மருத்​து​வர்​கள் தான் உள்​ளனர்.

அதனால், அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் பணி​யிடங்​களை 2 மடங்​காக அதி​கரிக்க வேண்​டும். சில தினங்​களுக்கு முன்​பு, தலைமை செய​லா​ளர் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில், சுகா​தா​ரத் துறை​யில் நிரந்தர பணி கிடை​யாது என அறி​வித்​துள்​ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

இது சுகா​தா​ரத் துறைக்கு மிகப்​பெரிய பின்​னடைவை ஏற்​படுத்​து​வ​தாக அமை​யும். மக்​கள் உயிரை காப்​பாற்ற போராடும் அரசு மருத்​து​வர்​களை தங்​கள் ஊதி​யத்​துக்​காக போராட வைப்​பது அரசுக்கு அழகல்ல.

கள்​ளக்​குறிச்​சி​யில் கள்​ளச் சாரா​யத்​தால் உயி​ரிழந்​தவர்​கள் குடும்​பத்​தினருக்கு உடனடி​யாக ரூ.10 லட்​சம் நிவாரணத்தை முதல்​வர் அறி​வித்​தார்.

ஆனால், கரோனா பேரிடரில் மக்​களை காப்​பாற்ற போராடி உயி​ரிழந்த மருத்​து​வர்​களின் குடும்​பத்​தினருக்கு மு.க.ஸ்​டா​லின் அரசு இது​வரை 10 காசு கூடநிவாரண​மாக தரவில்​லை. அது​போல, கரோனா பணி​யில் உயி​ர் இழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனைவி ஒரு அரசு வேலைக்​காக 5 ஆண்​டு​களாக கண்​ணீர் சிந்​திய பிறகும் அரசு கருணை காட்ட மறுக்​கிறது.

இது​போன்று அரசு நடந்து கொண்​டால், எதிர்​காலத்​தில் கரோனா போன்று ஏதாவது கொள்ளை நோய் வந்​தால் எப்​படி மருத்​து​வர்​கள் தங்​கள் உயிரை பணயம் வைத்​து, அர்ப்​பணிப்​போடு பணி​யாற்ற முன் வரு​வார்​கள் என அரசு நினைத்து பார்க்க வேண்​டா​மா. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT