உயர் நீதிமன்றம், மதுரை. 
தமிழகம்

14 பல்கலை.யில் துணைவேந்தர் பதவி காலி: உயர்கல்வி செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: தமி​ழ​கத்​தில் 14 பல்​கலைக்​கழ​கங்​களில் துணைவேந்​தர் பதவி​கள் காலி​யாக இருப்​பது தொடர்​பாக உயர்​கல்வி முதன்​மைச் செய​லா​ளர் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை காம​ராஜர் பல்​கலைக்​கழக பொறுப்பு பதி​வாளர் எஸ்​.​முத்​தை​யாவை பதவிநீக்​கம் செய்​யக்​கோரி ஜோசப் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக்​கல் செய்​தார். மனுவை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார். பொறுப்பு பதி​வாளர் தரப்​பில், தற்​காலிக அடிப்​படை​யில் பொறுப்பு பதி​வாளர் பதவியை வகிக்​கிறேன். அப்​ப​தவிக்கு தேவை​யான அனைத்து தகு​தி​களும் உள்​ளன.நிரந்தர பதி​வாளர் நியமிக்க நடவடிக்​கை​கள் எடுக்​கப்​பட்டு வரு​கின்றன என கூறப்​பட்​டது.

இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது தமி​ழ​கத்​தில் 14 பல்கலைக்​கழ​கங்​களில் துணைவேந்​தர்​கள் இல்லை என்​பதும், பெரும்​பாலான பல்​கலைக்​கழ​கங்​கள் தற்​போது பொறுப்பு பதி​வாளர்​கள் மூலம் நிர்​வகிக்​கப்​பட்டு வரு​வதும் அனைத்து முடிவு​களும் கன்​வீனர் கமிட்டி மூல​மாகவே எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டன.

இதையடுத்து நீதிப​தி, இந்த மனுவை விசா​ரிக்க நீதி​மன்​றம் விரும்​ப​வில்​லை. இருப்​பினும் 14 பல்​கலைக்​கழ​கங்​களில் பல ஆண்​டு​களாக துணைவேந்​தர் ​இல்​லாத நிலை தொடர்​பாக உயர் கல்​வித்​துறை முதன்மைச் செய​லா​ளரிட​மிருந்து அறிக்கை பெற நீதி​மன்​றம் விரும்​பு​கிறது.

துணைவேந்​தர் பதவி​களை நிரப்ப எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்​கை​கள் குறித்​தும் உயர் கல்​வித்​துறை முதன்​மைச் செயலரிட​மிருந்து உரிய விளக்​கம் பெற்று தெரிவிக்க அரசு தலைமை வழக்​கறிஞருக்கு உத்​தர​விட்டு வி​சா​ரணையை 3 வாரங்​களுக்கு தள்ளிவைக்​கப்​படு​வதாக நீதிபதி உத்​தர​விட்​டார்​.

SCROLL FOR NEXT