உயர் நீதிமன்றம் மதுரை கிளை

 
தமிழகம்

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? - புதிய விதிகளை வகுக்க ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: அரசு அலு​வல​கங்​களில் பணி நேரத்​தில் அரசு ஊழியர்​கள் தங்​களிடம் எவ்​வளவு ரொக்​கம் வைத்​திருக்​கலாம் என்ற விதியை வகுக்க வேண்​டும் என உயர் நீதி​மன்றம் உத்​தர​விட்​டது.

திருநெல்​வேலி மாவட்​டத்தைச் சேர்ந்த கலா என்​பவர் மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில், முக்​கூடல் சார் பதி​வாள​ராகப் கடந்த 2021-ம் ஆண்டு பணி​யாற்​றிய​போது, அலு​வல​கத்​தில் நான் ரூ.45,000 வைத்​திருந்​த​தாக லஞ்ச ஒழிப்​புத் துறை நடத்​திய சோதனை​யில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டு, துறைரீ​தி​யான ஒழுங்கு நடவடிக்​கைக்கு அனுப்​பப்​பட்​டது. இந்த நடவடிக்​கையை ரத்து செய்ய வேண்​டும் என குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், அந்த பணம் சொந்த செல​வுக்​காக வைக்​கப்​பட்​டிருந்​தது என தெரிவிக்​கப்​பட்​டது. அரசுத் தரப்​பில், பதிவுத்​துறை​யின் தலை​மைப் பதி​வாளர் வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​யின்​படி பணி​யில் இருக்​கும்​போது தங்​களிடம்

வைத்​திருக்​கக் கூடிய பண வரம்பு குறித்​தும், இது தொடர்​பான பதிவேடு​களைப் பராமரிப்​பது குறித்​தும் அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக கூறினார்.

இதையடுத்து நீதிப​தி, சுற்​றறிக்​கையை தாக்​கல் செய்​திருந்​தா​லும், அது பதிவுத்​துறை​யால் மட்​டுமே வெளி​யிடப்​பட்​டுள்​ளது. மாநிலத்​தின் அனைத்து அரசு ஊழியர்​களை​யும் உள்​ளடக்​கிய பொது​வான வழி​காட்​டு​தல்​களோ அல்​லது அரசாணையோ இல்லை என்றே தெரி​கிறது.

அரசு ஊழியர்​கள் பணி​யில் இருக்​கும்​போது தங்​களிடம் வைத்​திருக்​கக்​கூடிய ரொக்​கப்பணத்​துக்​குப் பொது​வான வரம்பை நிர்​ண​யித்து ஒரே மாதிரி​யான வழி​காட்​டு​தல்​கள் அல்​லது அரசாணையை வெளி​யிட வேண்​டும். இதுகுறித்து அரசு தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு வழக்கு விசா​ரணையை நீதிபதி தள்ளிவைத்​தார்.

SCROLL FOR NEXT