தமிழகம்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்​கான படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப புதிய மருத்​துவ பணி​யிடங்​கள் உள்​ளிட்ட கோரிக்​கைகளுக்​காக அரசு மருத்துவர்கள் நீண்​ட​கால​மாக போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், கடந்த 12-ம் தேதி​யில் இருந்து ஒரு​வாரமாக கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் கோரிக்​கைகள் அடங்​கிய அட்டை அணிந்து பணி​யாற்றி வரு​கின்​றனர்.

          

நேற்று முன்​தினம் சுகா​தா​ரத்​துறை செயலர் செந்​தில்​கு​மார் தலை​மை​யில் கூட்​டம் நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்​கங்​களின் கூட்​டமைப்பு நிர்​வாகி​கள் பங்​கேற்று கோரிக்​கைகள் குறித்து விளக்​கினர்.

அப்​போது, சுகா​தா​ரத்​ துறை செயலர், முதல்​வரின் உத்​தரவை பெற்​று, நிதித்​துறை அமைச்​சர், நிதித்​துறை செய​லா​ளர் ஒப்​புதல் உடன் கோரிக்​கைகள் குறித்து பரிசீலித்து முடிவு அறிவிக்​கப்​படும் என்று தெரி​வித்​தார். இதனை ஏற்று கொண்ட அரசு மருத்துவர்கள், நேற்று நடத்த இருந்த ஒரு​நாள் அடை​யாள உண்​ணா​விரத போராட்​டத்தை ஒத்தி வைத்​தனர்.

எதிர்​பார்த்த தீர்வு கிடைக்​க​வில்லை என்​றால், வரும் 28-ம் தேதி முதல் சென்​னை​யில் 2 நாட்​கள் முதல்​வர் கவனத்தை ஈர்க்​கின்ற வகை​யில் முதல் கட்​ட​மாக அடை​யாள உண்​ணாவிரத போராட்​ட​மும், தொடர்ந்து படிப்​படி​யாக அறி​வித்​த​படி அடுத்​தகட்ட போராட்​டமும் நடத்​து​வது என்று கூட்​டமைப்பின் ஒருங்​கிணைப்​பாளர்​கள் முடிவு செய்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT