அரசு கேபிள் டிவி செட் ஆப் பாக்ஸ் 
தமிழகம்

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம்: 12 லட்சம் சந்தாதாரர்கள் பாதிக்கப்படுவர் என கருத்து

செட் டாப் பாக்ஸ்களை ரீசார்ஜ் செய்ய முடியாமல் ஆபரேட்டர்கள் அவதி

இ.ஜெகநாதன்

சிவகங்கை: தமிழகத்​தில் அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்​ஸ்​களை ரீசார்ஜ் செய்ய முடி​யாத​தால், ஆபரேட்​டர்​கள் அச்​சத்​தில் உள்​ளனர். இதனால் அரசு கேபிள் டிவி நிறு​வனம் முடங்​கும் அபா​யத்​தில் உள்​ளது.

தமிழகத்​தில் அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில் 12 லட்​சம் சந்​தா​தா​ரர்​கள் உள்​ளனர். அவர்​களுக்கு இலவச​மாக செட் டாப் பாக்​ஸ்​கள் வழங்​கப்​பட்​டு, மாதம் ரூ.200 கட்​ட​ணத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட சேனல்​கள் ஒளிபரப்​பப்​பட்டு வரு​கின்​றன. தனி​யார் கேபிள் நிறு​வனங்​கள் மாதம் ரூ.250-க்கு மேல் கட்​ட​ணம் வசூலிப்​ப​தால், மக்​கள் அரசு கேபிள் டிவியையே விரும்​பு​கின்​றனர்.

மேலும், அரசு கேபிள் டிவி நிறு​வனத்​துக்கு தேவை​யான செட் டாப் பாக்​ஸ்​கள் விநி​யோகம், சர்​வர் பராமரிப்பை தனி​யார் நிறு​வனம் மேற்​கொண்டு வரு​கிறது. கடந்த ஒரு வார​மாக புதி​தாக சேரும் சந்​தா​தா​ரர்​களுக்கு செட் டாப் பாக்​ஸ்​களை பொருத்தி ரீசார்ஜ் செய்ய முடிய​வில்​லை.

அதே​போல், சேவையை வேண்​டாம் என்று சொல்​வோருக்கு இணைப்பை துண்​டிக்​க​வும் முடிய​வில்​லை. இந்த பிரச்​சினை​யால் பழுதடைந்த பாக்​ஸ்​களை கூட மாற்ற முடிய​வில்​லை. இதேநிலை நீடித்​தால், அரசு கேபிள் டிவி முடங்​கும் அபா​யம் உள்​ளது. இதனால், மாநிலம் முழு​வதும் உள்ள பல ஆயிரக்​கணக்​கான அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் அச்​சத்​தில் உள்​ளனர்.

இதுகுறித்து அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் கூறிய​தாவது: மூன்று ஆண்​டு​களுக்கு முன்​பு, செட் டாப் பாக்​ஸ்​கள் விநி​யோகம், சர்​வர் பராமரிக்​கும் தனி​யார் நிறு​வனத்​துக்கு நிலு​வைத்​தொகை இருந்​த​தால், அந்​நிறு​வனம் ஒளிபரப்பு சேவையை முடக்​கியது. நீதிமன்ற உத்​தர​வையடுத்​து, மீண்​டும் சரிசெய்​யப்​பட்​டது.

அதன் பின்​னர், கடந்த சில ஆண்​டு​களாக சிக்​னல் பிரச்​சினை இல்​லாமல் அரசு கேபிள்டிவி ஒளிபரப்​பப்​பட்டு வரு​கிறது.

இதனால், அரசு கேபிள் டிவி சந்தா தாரர் எண்ணிக்கை அதிகரித்தது. தற்​போது, மீண்​டும் செட் டாப் பாக்​ஸ்​கள் விநி​யோகிக்​கும் தனி​யார் நிறு​வனத்​துக்கு அரசு கேபிள் டிவி நிறு​வனம் முறை​யாக பணம் செலுத்​த​வில்லை என்று கூறப்​படு​கிறது.

அந்த நிறு​வனம் சர்​வரை முடக்​கிய​தால், புதி​தாக செட் டாப் பாக்​ஸ்​களை பொருத்தி ரீசார்ஜ் செய்ய முடிய​வில்​லை. பழுதடைந்த பாக்​ஸ்​களை மாற்​றித் தரவும் முடிய​வில்​லை. அதே​போல், இணைப்பு வேண்​டாம் என்று சொல்​​வோருக்​கும் துண்​டிக்க முடிய​வில்​லை. துண்​டிக்க முடி​யா​விட்​டால், அதற்​குரிய பணத்தை நாங்​கள்​தான் செலுத்த வேண்​டும்.

இப்​பிரச்​சினை கடந்த ஒரு வார​மாக தொடர்​வ​தால், அரசு கேபிள் டிவி நிறு​வனத்தை மூடி​விடு​வார்​களோ என்ற அச்​சம் ஏற்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர். இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவன அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘தனி​யார் நிறு​வனத்தை நம்​​பாமல், அரசு கேபிள் டிவி தொழில்​நுட்ப உதவி​யார்​கள்மூலமே செட் டாப் பாக்ஸ் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வரு​கிறோம்’ என்​றனர்​.

SCROLL FOR NEXT