கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், பொதுத்துறைச் செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத்துறை கூடுதல் செயலர் கே.பாலசுப்பிரமணியம், முன்னாள் படைவீரர் நல இணை இயக்குநர் மேஜர் சுரேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 
தமிழகம்

கொடிநாள் நிதிக்கு ஆளுநர், முதல்வர் நன்கொடை

செய்திப்பிரிவு

சென்னை: ​கொடி​நாளை ஒட்டி கொடிநாள் நிதிக்கு ஆளுநர், முதல்​வர், துணை முதல்​வர் ஆகியோர் நன்​கொடை வழங்​கினர். இந்​தி​யா​வின் முப்​படை வீரர்​களின் அரும்​பணி​களை​யும், தியாகத்​தை​யும் போற்​றும் நாளாக ஆண்​டு​தோறும் டிச.7-ம் தேதி கொடிநாள் கடைபிடிக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் ஆளுநர் ஆர்​.என்​. ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஆகியோர் கொடிநாள் நிதிக்​காக சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே​விடம் நன்​கொடை வழங்கி வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

ஆளுநர் ஆர்​.என்​.ரவி வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி: நம் தேசத்​தின் எல்​லைகளைப் பாது​காத்து நாட்​டின் இறை​யாண்​மையை உயர்த்​திப் பிடித்​து​வரும் நம் ராணுவ வீரர்​களுக்​கு, கொடிநாள் வணக்​கங்​களை நாம் சிரம் தாழ்த்தி நன்​றி​யுடன் தெரி​வித்​துக் கொள்​வோம். நமது தேசத்​தை​யும், மக்​களை​யும் பாது​காப்​புடன் வைத்​திருக்​கும் தன்​னலமற்ற சேவை, துணிவு, தியாகம் ஆகிய​வற்றை நினை​வூட்​டும் நாளே கொடி நாள் ஆகும்.

நிபுணத்​து​வம், வீரம், கடமை​யில் அசைக்க முடி​யாத அர்ப்​பணிப்பு ஆகிய​வற்​றுக்கு இந்​திய ராணுவம் புகழ் பெற்​றது. ராணுவத்​தினரின் கொடிநாள் நிதிக்கு நிதி அளிப்​ப​தன் மூலம் படைவீரர்​களின் கண்​ணி​யத்​துக்​கும் நலனுக்​கும் நாம் துணை நிற்​பதுடன், அனுபவம் மிக்க நம் முன்​னாள் படை வீரர்​களுக்​கும் போரி​னால் கணவரை இழந்​திருப்​பவர்​களுக்​கும் நம்​மால் உதவ முடி​யும். கொடிநாள் நிதியை முழு​மனதுடன் தாராள​மாக வழங்​கு​மாறு தமிழ்​நாட்டு மக்​களை நான் வேண்டி விரும்​பிக் கேட்​டுக்​கொள்​கிறேன்.

கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம், ஆளுநர் ஆர்.என்.ரவி, கிண்டி லோக் பவனில் கொடி நாள் நிதிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: தாயகம் காக்க தன்​னலம் மறந்து பணி​யாற்​றும் முப்​படை வீரர்​களுக்​கும், அவர்​தம் குடும்​பத்​தினருக்​கும் ஆயுதப்​படை கொடி​நாளில் நாட்டு மக்​களின் சார்​பில் எனது வணக்​கங்​கள்.

மக்​கள் அச்​சமின்​றிப் பாது​காப்​பாக வாழ, உயிரைத் துச்​ச​மாக எண்​ணி, கடுமை​யான சூழல்​களில் கண்​ணுறங்​காமல் காவல் காக்​கும் படைவீரர்​களின் பணி ஈடு இணை​யற்​றது. தியாகத் தீரர்​களின் மறு​வாழ்​வுக்​கும் அவர்​களின் குடும்ப நலனுக்​காக​வும் கொடிநாள் நிதி​யளிப்​பது குடிமக்​களான நம் அனை​வரின் கடமை.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: முப்​படை வீரர்​களின் வீரத்​தைப் போற்​றும் வகை​யிலும், போரில் தியாகம் புரிந்த வீரர்​களுக்​கும் அவர்​களது குடும்​பத்​துக்​கும் உதவும் வகை​யிலும், கொடி நாள் நிதிக்​கான நன்​கொடை அளித்​தோம்.

நாட்​டுக்​குள் நாம் நல்​வாழ்வு வாழ, தங்​கள் உயிரை​யும் துச்​சமெனக் கருதி எல்​லை​யைப் பாது​காக்​கும் படை வீரர்​கள் நன்​றிக்​குரிய​வர்​கள். பரந்த மனப்​பான்​மை​யுடன் கொடி நாள் நிதி அளிப்​போம். படை வீரர்​களுக்​கும், அவர்​கள் குடும்​பத்​தினருக்​கும் என்​றும் துணை நிற்​போம்.

SCROLL FOR NEXT