தமிழகம்

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 900 பவுன் நகை திருடு போனதாக புகார்

மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

கோவை: கோவை​யில் ரியல் எஸ்​டேட் அதிபர் வீட்​டில் 900 பவுன் நகை திருடு போனது தொடர்​பான புகாரில், டாக்​டர் மரு​மகன் மற்றும் குடும்​பத்​தினர் மீது போலீ​ஸார் வழக்கு பதிந்தனர்.

கோவை கணபதி மாநகர் எஸ்​.ஆர்​.​வி. நகரைச் சேர்ந்தவர் எஸ்.சண்​முக பாண்​டியன். ரியல் எஸ்​டேட் உரிமை​யாளர். இவர், கோவை மாநகர குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் கடந்த 3-ம் தேதி அளித்த புகார் மனு:

எனது இளைய மகள் மருத்​து​வர் கவுசல்​யா​வுக்​கும், பெரியநாயக்​கன்​பாளை​யம் ஜோதிபுரத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் விக்​னேஷ்-க்​கும் கடந்த 2024-ல் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணம் முடிந்​தவுடன், எனது சம்​பந்தி முரு​கேசன்- வாசுகி, அவர்களது மகள் ஜீவிதா ஆகிய மூவரும் காளப்​பட்​டி​யில் உள்ள எனக்​குச் சொந்​த​மான சுமார் 1 ஏக்​கர் பரப்​பளவி​லான பங்​களா​வுக்கு குடியேறினர்.

மரு​மகன் விக்​னேஷ் மீது வைத்திருந்த நம்​பிக்​கையால் லாக்​கர் மற்​றும் பீரோ சாவியை அவரிடம் ஒப்​படைத்​தேன். அதில் 1000 பவுன் நகைகள் இருந்​தன. பின்​னர், காளப்​பட்​டி​யில் உள்ள எனது பங்களாவை தனது பெயருக்கு எழுதி வைக்க விக்​னேஷ் எனது மகளிடம் வலி​யுறுத்​தி​னார். இதையறிந்த நான் கடந்​தாண்டு அந்த பங்​களாவை விற்​று​விட்​டேன்.

இதனால் கோபமடைந்த விக்​னேஷ் எனது மகளிடம் பிரச்​சினை செய்​யத் தொடங்​கி​னார். பின்​னர், எனது மகளை விட்டு​ விட்​டு, விக்​னேஷ் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் சிட்ரா​வில் உள்ள ஒரு வீட்​டில் குடியேறினர். ஆனால் எனது பீரோ மற்​றும் லாக்​கர் சாவியை விக்​னேஷ் தர மறுத்​து​விட்​டார்.

இதனால் சந்​தேகமடைந்த நான், லாக்​கரை உடைத்து பார்த்​த​போது, அதில் 1000 பவுன் நகைகள் இல்​லை. இதுபற்றி கேட்​டதற்கு 100 பவுன் நகைகளை மட்​டும் விக்​னேஷ் திரும்​பிக் கொடுத்​தார். மீதம் உள்ள 900 பவுனை திரும்​பிக் கொடுக்​க​வில்​லை. இவற்​றின் மதிப்பு ரூ.10 கோடி​யாகும். நகைகளை கேட்​ட​போது, விக்​னேஷ் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் கொலை மிரட்​டல் விடுத்​தனர். இதுதொடர்​பாக போலீ​ஸார் விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்​னேஷ் மற்​றும் அவரது தாயார் வாசுகி, சகோ​தரி ஜீவிதா ஆகியோர் மீது 3 பிரிவு​களின்​கீழ் வழக்​குப் பதிந்து கோவை மாநகர குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT