தமிழகம்

காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலையில் வேலை நிறுத்தம் மாலையில் திரும்ப பெற்றனர்

வாடகை நிலு​வை கோரி அறிவிக்கப்பட்டிருந்தது

செய்திப்பிரிவு

நாமக்கல்: ​வாடகை நிலு​வை தொகையை வழங்​கக் கோரி, தென்​மண்டல காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் நேற்று காலை வேலை நிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட நிலை​யில், மாலை​யில் போராட்டத்தை வாபஸ் பெற்​றனர்.

நாமக்​கல்லை தலை​மை​யிட​மாகக் கொண்டு தமிழகம், கேரளா, ஆந்​திரா, தெலங்​கா​னா, கர்​நாட​கா, புதுச்​சேரி ஆகிய மாநிலங்​களை உள்​ளடக்​கிய தென்​மண்டல எல்​.பி.ஜி.​காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் செயல்​பட்டு வரு​கிறது.

இச்​சங்​கத்​தில் 4,500 காஸ் டேங்​கர் லாரி​கள் உள்ளன. இந்த லாரி​கள் அனைத்​தும் மத்​திய அரசுக்​குச் சொந்​த​மான ஐஓசி, பிபிசிஎல், எச்​பிசிஎல் ஆகிய 3 எண்​ணெய் நிறு​வனங்​களுக்​குச் சொந்​த​மான சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களி​லிருந்து சமையல் எரி​வா​யுவை ஏற்றிக் கொண்டு பாட்​டிலிங் மையங்​களுக்கு எடுத்​துச் செல்வதற்காக ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கப்​படு​கின்​றன.

இதில், 1,000 எல்​பிஜி காஸ் டேங்கர் லாரிகள் ஐஓசி நிறு​வனத்​துக்காக (இந்​தி​யன் ஆயில் நிறு​வனம்) இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்த நிறு​வனம் கடந்த சில ஆண்​டு​களாக டேங்​கர் லாரி உரிமை​யாளர்​களுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வாடகை வழங்​காமல் நிலு​வை​யில் வைத்​துள்​ளதாக கூறப்படுகிறது.

இந்​நிலை​யில், இந்த வாடகை நிலு​வையை வழங்​கக் கோரி நேற்று காலை முதல் ஐஓசி நிறு​வனத்துக்கு இயக்​கப்படும் காஸ் டேங்கர் லாரிகளில் லோடு ஏற்​றாமல் ஆங்காங்கே நிறுத்தி வேலைநிறுத்​தப் போராட்டத்தில் ஈடு​பட்​டார்கள்.

இதனிடையே, ஐஓசி அதி​காரி​கள், டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்க நிர்​வாகி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, 2 நாட்​களில் வாடகை நிலு​வைத் தொகை வழங்​கு​வ​தாக உறு​தி​யளித்​தனர். இதை ஏற்​று, டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் நேற்று மாலை வேலைநிறுத்​தப் போராட்​டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்​.

SCROLL FOR NEXT