ஜி.ராமகிருஷ்ணன் | கோப்புப் படம்

 
தமிழகம்

சட்டம் ஒழுங்கு பிரச்சினை: ஜி.ராமகிருஷ்ணன் ‘அடடே’ விளக்கம்

செய்திப்பிரிவு

எந்த ஒரு மாநில​மாக இருந்​தா​லும் சட்​டம் ஒழுங்கு பிரச்​சினை​கள் ஏற்​படத்​தான் செய்​யும். அதை எவ்​வாறு கையாள்​கி​றார்​கள் என்​பது தான் முக்​கி​யம் என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மத்​திய கட்​டுப்​பாட்​டுக் குழு உறுப்​பினர் ஜி.​ரா​மகிருஷ்ணன் தெரி​வித்​தார்.

திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி திமுக வேட்​பாளர் டிஆர்​பி.​ராஜாவை ஆதரித்​து, நேற்று பந்​தலடி​யில் அவர் பேசி​யது: ஊக்​கத் தொகை கொடுப்​ப​தால் நெல் சாகுபடியை விவ​சா​யிகள் அதி​கள​வில் செய்​வார்​கள் என்​ப​தால், ஊக்​கத் தொகை தரு​வதை நிறுத்தி வேண்​டும் என தமிழக முதல்​வ​ருக்கு மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் கடிதம் எழு​தி​யுள்​ளார். இது குறித்து கேள்வி எழுப்​பிய​போது மறுத்த நிர்​மலா சீதா​ரா​மன், அதன்​பின்​னர் அதற்கு வேறு காரணங்​கள் கற்​பிக்​கி​றார்.

          

இதை நிறுத்​தச் சொல்​பவர்​கள், அதி​முக தேர்​தல் அறிக்​கை​யில் கூறியபடி நெல்​லுக்கு குவிண்​டாலுக்கு ரூ.3,500 எப்​படி தர முடி​யும்? இதுகுறித்து கேள்வி எழுப்​பி​னால் கூட்​டணி வேறு, கொள்கை வேறு என பழனி​சாமி கூறுகி​றார்​. சட்​டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு பழனி​சாமிக்கு தகுதி இல்​லை. எந்த ஒரு மாநில அரசாக இருந்​தா​லும் சட்​டம் ஒழுங்கு பிரச்​சினை​கள் ஏற்​படத்​தான் செய்​யும். அதை எவ்​வாறு கையாள்​கி​றார்​கள் என்​பது தான் முக்​கி​யம். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT