தமாகா-வின் 12-வது ஆண்டு தொடக்கவிழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தலைவர் ஜி.கே.வாசன். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

தமாகாவுடன் காமராஜர் மக்கள் இயக்கம் இணைகிறது: ஈரோட்டில் டிச.20-ல் இணைப்பு விழா - ஜி.கே.வாசன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ஈரோட்​டில் டிச.20-ல் நடை​பெறும் நிகழ்ச்​சி​யில், தமிழருவி மணி​யனின் காம​ராஜர் மக்​கள் இயக்​கம் தமிழ் மாநில காங்​கிரஸில் இணைய உள்​ள​தாக ஜி.கே.​வாசன் தெரி​வித்​தார்.

தமா​கா​வின் 12-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இவ்​விழா​வில் ஜி.கே.​வாசன் கூறிய​தாவது: பெருந்​தலை​வர் காம​ராஜர், மூப்​ப​னார் ஆசி​யோடு, தமிழ் மாநில காங்​கிரஸ் 12-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கிறது.

காந்​திய வழி​யில் கட்​சியை நடத்​தும் காம​ராஜர் மக்​கள் இயக்​கத்​தின் தலை​வர் தமிழருவி மணி​யன், தனது இயக்​கத்தை தமிழ் மாநில காங்​கிரஸில் இணைக்க உள்​ளார். ஈரோட்​டில் டிச.20-ம் தேதி நடை​பெறும் விழா​வில், காம​ராஜர் மக்​கள் இயக்​கத்தை தமிழ் மாநில காங்​கிரஸில் இணைக்​கிறார்.

நல்​ல​வர்​கள், ஊழல் அற்​றவர்​கள், வெளிப்​படை தன்​மையோடு செயல்​படு​பவர்​களின் துணை அனை​வருக்​கும் தேவை. நல்​லாட்​சி, தூய்​மை​யான ஆட்​சிக்கு இது​போன்ற இணைவு அவசி​யம்.

முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்​ல ஒன்றுமில்லை. தேசிய ஜனநாயக கூட்​டணி மக்​கள் விரும்​பும் கூட்​ட​ணி​யாக உள்​ளது.

தேர்​தல் வியூ​கம் அடிப்​படை​யில் கூட்​டணி வெற்​றி​பெற பிர​காச​மாக வாய்ப்பை ஏற்​படுத்​துகிறோம். தமிழக அரசின் மீது மக்​கள் கோபத்​தில் உள்​ளனர். அந்த தாக்​கம் எதிர்​மறை வாக்​காக மாறும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT