தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

தே.ஜ. கூட்டணியிலிருந்து விலகியது தமாகா: ஜி.கே.வாசன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து தமாகா வில​கு​வ​தாக கட்​சி​யின் தலை​வர் ஜி.கே.​வாசன் அறி​வித்​துள்​ளார். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பல ஆண்​டு​களாக பயணித்து வரும் தமிழ் மாநில காங்​கிரஸ் (தமா​கா) 2019 மக்​களவை தேர்​தலில் ஒரு தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோல்​வியை தழு​வியது.

பின்​னர், அதி​முக ஆதர​வுடன் ஜி.கே.​வாசன் மாநிலங்​களவை எம்​.பி ஆனார். 2021 சட்​டப்​பேரவை தேர்​தலிலும் அந்த கூட்​டணி தொடர்ந்த நிலை​யில், 6 இடங்​களில் தமாகா போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தது.

2024 மக்​களவை தேர்​தலில் பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து அதி​முக வெளி​யேறிய போதும், தமாகா கூட்​ட​ணி​யில் நீடித்​தது. அந்த தேர்​தலில் 3 இடங்​களில் சைக்​கிள் சின்​னத்​தில் தமாகா போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தது.

சமீபத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் 5 இடங்​களில் தாமரை சின்​னத்​தில் போட்​டி​யிட்ட தமாகா அனைத்​தி​லும் தோல்​வியை தழு​வியது.

இந்​நிலை​யில், தேர்​தல் தோல்வி மற்​றும் உள்​ளாட்சி தேர்​தல் தொடர்​பாக தமா​கா​வின் மாநில நிர்​வாகி​கள், மாவட்ட தலை​வர்​கள், செயற்​குழு உறுப்​பினர்​களு​ட​னான ஆலோ​சனை கூட்​டம், கட்​சி​யின் தலை​வர் ஜி.கே.​வாசன் தலை​மை​யில் எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில் அடுத்து வரு​விருக்​கும் உள்​ளாட்சி தேர்​தலில் மாவட்ட ரீதி​யாக வெற்​றி​ பெற என்ன தேவை? என்​பது குறித்து விவா​திக்​கப்​பட்​டது. தொடர்ந்து கட்​சி​யின் நிர்​வாக அமைப்பை சீரமைக்க ஜி.கே.​வாசனுக்கு முழு அதி​காரம், தேர்​தல் முடிந்த நிலை​யில் தமாகா தனி நிலைப்​பாட்​டில் பயணித்​தல் உட்பட 8 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

மாநில துணை தலை​வர்​கள் விடியல் சேகர், முனவர் பாஷா, சக்தி வடிவேல், பொருளாளர் ராமன், மாநில நிர்​வாகி​கள் வெங்​கடேசன், ரமேஷ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ஜி.கே.​வாசன் கூறிய​தாவது: தமிழகத்​தில் 60 ஆண்​டு​களுக்கு பின்பு அரசி​யலில் யாரும் எதிர்​பா​ராத வகை​யில் புதிய ஆட்சி மலர்ந்​திருக்​கிறது.

ஆனால் 2014 முதல் 2026 வரை தொடர்ந்து 12 ஆண்​டு​களில் நடந்த தேர்​தல்​களில், கூட்​ட​ணி​களில் தமாகா பங்கு பெற்​றும், எங்​களது இலக்கை எங்​களால் அடைய முடிய​வில்​லை. குறிப்​பாக கடந்த 3, 4 தேர்​தல்​களில் எங்​களது கூட்​ட​ணி​யும் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை.

மேலும் கூட்​ட​ணி​யில் இருக்​கும் போது கட்​சி​யின் பொறுப்​பாளர்​களுக்கு பொறுப்​பு​கள் குறைவ​தாக​வும், கூட்​டணி அரசி​யலில் கட்​சி​யின் வளர்ச்சி குறைவ​தாக​வும் நிர்​வாகி​கள் கருதுகின்​றனர். தேர்​தல் நேரத்​தில் கூட்​டணி அவசி​யம் என்​ப​தில் மாற்​றுக்​கருத்து கிடை​யாது.

அதே​நேரம் தேர்​தல் இல்​லாத நேரத்​தில் மாவட்ட தலை​வர்​களும், மாநில நிர்​வாகி​களும், பொறுப்​பாளர்​களும் தங்​களு​டைய கட்​சிப் பணியை பொறுப்​புணர்​வுடன் செய்​யக்​கூடிய நிலை ஏற்பட வேண்​டும்.

அதற்கு உள்​ளாட்சி தேர்​தல் வரும் வரை தமாகா தனித்​தன்​மையோடு செயல்பட வேண்​டும் என நிர்​வாகி​கள் விரும்​பு​கிறார்​கள். அதனடிப்​படை​யில் மத்​தி​யில் பாஜக, மாநிலத்தில் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து தமாகா நட்பு கட்​சி​யாகவே வில​கு​கிறது.

இனி எங்​களை வலுப்​படுத்தி கொள்ள நகரம் முதல் கிராமம் வரை மீண்​டும் கட்சி பணி​களை தீவிர​மாக மேற்​கொள்ள முடிவு செய்​துள்​ளோம் என்றார்.

தவெக​வா? திமுக​வா?

இதற்​கிடையே கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​களிடையே கேட்​ட​போது, அடுத்து தவெக அல்​லது தி​முகவுடன் கூட்​டணி வைத்து வரும் தேர்​தல்​களை சந்​திப்​பது குறித்து நிர்​வாகி​களிடம்​ ஆலோ​சனை நடத்​தி முடிவு செய்​யப்​படும்​ என தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT