தமிழகம்

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ​பாலியல் வன்​கொடுமை​களுக்கு எதி​ரான அரசின் நடவடிக்​கைகள் போது​மான​தாக இல்லை என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: சென்​னை நந்​தனம் அரசு கலை கல்​லூரி​யின் கேன்​டீனில் வேலை செய்து வந்த இளம்​பெண், கேன்​டீன் உரிமை​யாளர் மற்​றும் ஊழியர்​களால் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்ட சம்​பவம் மிக​வும் கண்​டிக்​கத்​தக்​கது.

          

கல்​வியை கற்​றுக்​கொடுக்​கும் வளாகத்​திலேயே மனி​தாபி​மானம் இல்​லாமல் குற்​றச்​செயல்​கள் நடை​பெறுகிறது என்​றால், ஆட்சி அதி​காரத்​தில் இருப்​பவர்​கள் மீது பயம் இல்​லாத நிலை​யையே எடுத்​துக் காட்​டு​கிறது. தமிழக அரசு பாலியல் வன்​கொடுமைக்கு எதி​ராக எடுக்​கும் நடவடிக்​கைகள் போது​மான​தாக இல்​லை.

பெண்​களுக்கு எதி​ரான பாலியல் வன்​கொடுமை​களுக்கு கடுமை​யான தண்​டனை கிடைக்​கும் என்​பதை உறுதி செய்​யும் வகை​யில் குற்​ற​வாளி​களுக்கு கடுமை​யான தண்​டனை கிடைத்​து, அது பொது​வெளி​யில் தெரி​யும் பட்​சத்​தில் தான் குற்​றம் செய்ய நினைப்​பவர்​களுக்கு பயம் ஏற்​படும்.

எனவே, பாலியல் தொந்​தர​வு​களுக்கு கடுமை​யான தண்​டனை கிடைக்​கும் வகை​யில் அரசு நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும். இச்​சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை சட்​டத்​தின் முன் நிறுத்தி அதி​கபட்ச தண்​டனையை காலம் தாழ்த்​தாமல் பெற்​றுத்தர வேண்​டும். இவ்​வாறு வாசன் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT