தமிழகம்

காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய திமுகவினர் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை காங்​கிரஸ் கட்​சி​யினரை தாக்கிய திமுக​வினர் 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் இருந்த காங்​கிரஸ் கட்​சி, தேர்​தல் முடிவுக்​குப் பின் கூட்​ட​ணியி​லிருந்து விலகி தவெக​வுக்கு ஆதரவு அளித்​த​தால், அக்​கட்​சி​யினர் மீது திமுக​வினர் கடும் அதிருப்​தி​யில் உள்​ளனர்.

இந்நிலையில், மயிலாடு​துறை​யில் காங்​கிரஸ் கட்சி சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற ஜமால் முகமது யூனுஸ் மற்​றும் காங்​கிரஸ் எம்​.பி. சுதா ஆகியோ​ருக்கு திமுக​வினர் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் மயி​லாடு​துறை​யில் கிட்​டப்பா அங்​காடி முன்பு கடந்த 8-ம் தேதி ஆளுநரைக் கண்​டித்து காங்​கிரஸ் கட்​சி​யினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர் அவர்​கள் கலைந்து சென்​ற​போது அங்கு வந்த திமுக​வினருக்​கும் காங்​கிரஸ் கட்​சி​யினருக்​கும் தகராறு ஏற்​பட்​டது. அப்​போது காங்​கிரஸ் பிர​முகர்​கள் தாக்​கப்பட்டு, கொடி​யும் சேதப்​படுத்​தப்பட்டது.

இதுகுறித்து காங்​கிரஸ் வட்​டார தலை​வர் ராஜா அளித்த புகாரின்​பேரில் மயி​லாடு​துறை போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து திமுகவைச் சேர்ந்த மருத​முத்​து, வின்​சென்ட், ரகு, ஜெயச்​சந்​திரன் ஆகியோரை நேற்று முன்​தினம் கைது செய்​து, காவல் நிலைய பிணை​யில் விடு​தலை செய்​தனர்.

SCROLL FOR NEXT