இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து கடிதம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.

 
தமிழகம்

இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை கோரிய அதிமுக: நயினார் நாகேந்திரனுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னை: இடைத்​தேர்​தலில் அதி​முக​வுக்கு ஆதரவு தரு​மாறு பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனை சந்​தித்து அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் கடிதம் வழங்​கினர்.

தாராபுரம், மது​ராந்​தகம் ஆகிய 2 தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த 2 தொகு​தி​களும் கடந்த தேர்​தலில் அதி​முக வெற்றி பெற்ற தொகு​தி​கள் என்​ப​தால், மீண்​டும் அவற்​றில் வெல்ல அதி​முக தீவிரம் காட்டி வரு​கிறது.

இந்​நிலை​யில், அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் கே.பி.​முனு​சாமி, திண்​டுக்​கல் சீனி​வாசன், ஓ.எஸ்​.மணி​யன், அக்ரி கிருஷ்ண​மூர்த்தி ஆகியோர் சென்னை கமலால​யத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனை நேற்று சந்​தித்​தனர்.

இந்த சந்​திப்​பின்​போது பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், மாநில செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன் உள்​ளிட்​டோர் இருந்​தனர்.

2 தொகுதி இடைத்​தேர்​தலில் ஆதரவு கோரி அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி எழு​திய கடிதத்தை நயி​னார் நாகேந்​திரனிடம் கே.பி.​முனு​சாமி வழங்​கி​னார். தொடர்ந்​து, மற்ற தோழமைக் கட்​சிகளின் தலை​வர்​களை​யும் சந்​தித்து ஆதரவு திரட்ட அதி​முக திட்​ட​மிட்​டுள்​ளது.

இந்த சந்​திப்​புக்கு பிறகு செய்​தி​யாளர்​களிடம் கே.பி.​முனு​சாமி கூறிய​தாவது: கடந்த தேர்​தலில் மக்​கள் அதி​முகவை நம்பி வாக்​களித்து வெற்றி பெறச் செய்​தனர். ஆனால், வெற்றி பெற்​றவர்​கள் மக்​களை ஏமாற்​றி​விட்டு சென்​று​விட்​டனர்.

மீண்​டும் மக்​கள் நம்​பிக்​கையோடு அதி​முக வேட்​பாளர்​கள் களம் இறக்​கப்​பட்டு உறு​தி​யாக வெற்றி பெறு​வார்​கள். எங்​கள் கடிதத்தை பாஜக தலை​வர் இன்​முகத்​தோடு பெற்​றுக்​கொண்​டார். கட்​சித் தலை​மை​யுடன் ஆலோ​சித்து நல்ல முடிவை அறி​விப்​ப​தாகக்​ கூறி​யுள்​ளார்​” என தெரி​வித்​தார்​.இடைத்​தேர்​தலில் அதி​முக​வுக்கு ஆதரவு தரு​மாறு பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனை சந்​தித்து அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் கடிதம் வழங்​கினர்.

தாராபுரம், மது​ராந்​தகம் ஆகிய 2 தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த 2 தொகு​தி​களும் கடந்த தேர்​தலில் அதி​முக வெற்றி பெற்ற தொகு​தி​கள் என்​ப​தால், மீண்​டும் அவற்​றில் வெல்ல அதி​முக தீவிரம் காட்டி வரு​கிறது.

இந்​நிலை​யில், அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் கே.பி.​முனு​சாமி, திண்​டுக்​கல் சீனி​வாசன், ஓ.எஸ்​.மணி​யன், அக்ரி கிருஷ்ண​மூர்த்தி ஆகியோர் சென்னை கமலால​யத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனை நேற்று சந்​தித்​தனர்.

இந்த சந்​திப்​பின்​போது பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், மாநில செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன் உள்​ளிட்​டோர் இருந்​தனர்.

2 தொகுதி இடைத்​தேர்​தலில் ஆதரவு கோரி அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி எழு​திய கடிதத்தை நயி​னார் நாகேந்​திரனிடம் கே.பி.​முனு​சாமி வழங்​கி​னார். தொடர்ந்​து, மற்ற தோழமைக் கட்​சிகளின் தலை​வர்​களை​யும் சந்​தித்து ஆதரவு திரட்ட அதி​முக திட்​ட​மிட்​டுள்​ளது.

இந்த சந்​திப்​புக்கு பிறகு செய்​தி​யாளர்​களிடம் கே.பி.​முனு​சாமி கூறிய​தாவது: கடந்த தேர்​தலில் மக்​கள் அதி​முகவை நம்பி வாக்​களித்து வெற்றி பெறச் செய்​தனர். ஆனால், வெற்றி பெற்​றவர்​கள் மக்​களை ஏமாற்​றி​விட்டு சென்​று​விட்​டனர்.

மீண்​டும் மக்​கள் நம்​பிக்​கையோடு அதி​முக வேட்​பாளர்​கள் களம் இறக்​கப்​பட்டு உறு​தி​யாக வெற்றி பெறு​வார்​கள். எங்​கள் கடிதத்தை பாஜக தலை​வர் இன்​முகத்​தோடு பெற்​றுக்​கொண்​டார். கட்​சித் தலை​மை​யுடன் ஆலோ​சித்து நல்ல முடிவை அறி​விப்​ப​தாகக்​ கூறி​யுள்​ளார்​” என தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT