தமிழகம்

அதிமுக 200 இடங்களில் வெல்லும்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: நெல்​லுக்​காரத் தெரு​வில் அமைந்​துள்ள சித்​ரகுப்த சுவாமி கோயி​லில், திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெற்​றது.

இந்த விழா​வில் பங்​கேற்று சுவாமி தரிசனம் செய்த முன்​னாள் அமைச்​சர் கடம்​பூர் ராஜுவுக்கு கோயில் நிர்​வாகம் சார்​பில் சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

இதனைத் தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் பேசி​ய​தாவது: கடந்த ஏப்.23-ம் தேதி நடந்த தேர்​தலிலேயே மக்​கள் தங்​களது தீர்ப்பை வழங்​கி​விட்​டனர். அந்​தத் தீர்ப்பு அதி​முக​வுக்கு சாதக​மாக இருக்​கும்.

இந்​தத் தேர்​தலில் 200-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களைக் கைப்​பற்றி அதிமுக மீண்​டும் ஆட்சி அமைக்​கும். பேரறிஞர் அண்​ணாவுக்​குப் பிறகு, கட்​சித் தொடங்​கித் தொடர்ந்து வெற்றி பெற்​றவர் புரட்​சித் தலை​வர் எம்​ஜிஆர் மட்​டுமே.

அதி​முக​வின் வாக்​குச் சதவீதத்தை யாராலும் கைப்பற்ற முடி​யாது என்ற நிலை​யோடு தேர்​தல் முடிவு​கள் வரும்” என்​றார்​.

SCROLL FOR NEXT