தமிழகம்

ஆட்கொணர்வு மனு எதிரொலி: முன்னாள் காவல் ஆணையர் அருண் ஆஜராக உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கட்​டு​மான நிறுவன உரிமை​யாளர் குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட விவ​காரத்​தில் சென்னை மாநகர முன்​னாள் காவல் ஆணை​யர் அருண் ஆஜராக உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மாதவரம் ரவுண்​டானா அருகே கொளத்​தூர் ராம​தாஸ் நகரில் தேமு​திக எம்​.பி. சுதீஷின் மனைவி பூர்​ணஜோ​திக்கு சொந்​த​மான 2 ஏக்​கர் 10 சென்ட் நிலத்​தில் 234 அடுக்​கு​மாடி வீடு​களை கட்​டி, அதில் 78 வீடு​களை தங்​களுக்கு ஒதுக்​கு​மாறு கட்​டு​மான நிறுவன உரிமை​யாளர் சந்​தோஷ் சர்​மாவுடன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டது.

ஆனால், சந்​தோஷ் சர்மா போலி​யாக கையெழுத்​திட்டு அந்த 78 வீடு​களை ரூ.43 கோடிக்கு விற்​பனை செய்து தங்​களை மோசடி செய்​த​தாக சுதீஷ் தரப்​பில் போலீ​ஸில் புகார் கொடுக்​கப்​பட்​டது.

இதன்​பேரில் பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான சந்​தோஷ் சர்மா ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார். வீடு​களை வாங்​கிய​வர்​களிடம் அவற்றை ஒப்​படைக்​காமல் ஏமாற்றி விட்​ட​தாக கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்​யப்​பட்டு மீண்​டும் கைது செய்​யப்​பட்​டார்.

இதையடுத்​து, சந்​தோஷ் சர்​மாவை குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் சிறை​யில் அடைக்​கு​மாறு கடந்த 2025 செப்​.22-ம் தேதி அப்​போதைய சென்னை காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார்.

இதை எதிர்த்து சந்​தோஷ் சர்​மா​வின் மகள் வர்ஷா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்​தார். ‘கடந்த 2019-2023 கால​கட்​டத்​தில் நடந்த சம்​பவம் தொடர்​பாக 2 ஆண்​டு​கள் தாமத​மாக 2025-ம் ஆண்டு குண்​டர் சட்​டத்​தில் எனது தந்​தையை சிறை​யில் அடைத்​துள்​ளனர்.

சுதீஷ் தரப்​பில் அளித்த புகாரில் ஏற்​கெனவே ஜாமீனில் வெளியே வந்த நிலை​யில், மீண்​டும் அதே விவ​காரத்​துக்​காக வீடு​களை வாங்​கிய உரிமை​யாளர்​களிடம் புகார் பெற்று மீண்​டும் 2 வழக்​கு​களை பதிவு செய்து குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைத்​தது சட்ட விரோதம்.

எனவே, அவர் மீதான குண்​டர் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும்’ என்று அதில் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு இறுதி விசா​ரணைக்​காக ஜூன் மாதத்​துக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், தனது கணவருக்கு 4 வாரம் ஜாமீன் வழங்க வேண்​டும் என்று கோரி சந்​தோஷ் சர்​மா​வின் மனைவி கல்​பனா இடைக்​கால மனு தாக்​கல் செய்​தார். நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் அமர்​வில் இந்த மனு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், ‘‘குண்​டர் தடுப்​புச் சட்​டத்தை எதற்கு உபயோகிப்​பது என்​பது ஐபிஎஸ் அதி​காரிக்கு தெரி​யா​தா? சென்னை மாநகர முன்​னாள் காவல் ஆணை​யர் அருண் அடுத்த வாரம் ஆஜராக வேண்​டும்​’’ என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​தனர்​.

SCROLL FOR NEXT