தமிழகம்

8 மாவட்டங்களில் பிப்.11-ம் தேதி வரை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை நீல​கிரி, சேலம், வேலூர் உள்​ளிட்ட 8 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​காலை நேரத்​தில் மித​மான பனிமூட்​டம் காணப்​படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் இன்று (பிப்​.8) முதல் வரும் 13-ம் தேதி வரை வறண்ட வானிலை நில​வக்​கூடும்.

          

அதே​போல, வரும் 11-ம் தேதி வரை நீல​கிரி, திண்​டுக்​கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தரு​மபுரி, திருப்​பத்​தூர், வேலூர் மற்​றும் ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​காலை நேரத்​தில் மித​மான பனிமூட்​டம் காணப்​படும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதி​கபட்ச வெப்​பநிலை 31 டிகிரி செல்​சி​யஸ், குறைந்​த​பட்ச வெப்​பநிலை 22 டிகிரி செல்​சி​யஸ் அளவில் இருக்​கும். மீனவர்​களுக்​கான எச்​சரிக்கை ஏது​மில்​லை. தமிழகத்​தில் பிப். 7-ம் தேதி (நேற்​று) நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் திருத்​தணியில்16 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலைபதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT