கோப்புப் படம்

 
தமிழகம்

சென்னையில் ரூ.245 கோடி தங்கம் பறிமுதல்: பறக்கும் படையினர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தல் பறக்​கும் படை​யினர் சென்​னை​யில் நடத்​திய வாகன சோதனை​யில், உரிய ஆவணங்​கள் இன்றி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.245 கோடி மதிப்​புள்ள தங்க நகைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

சென்னை வேளச்​சேரி சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட அடை​யாறு மேம்​பாலப் பகு​தி​யில் தேர்​தல் பறக்​கும் படை​யினர் நேற்று காலை வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, அந்த வழி​யாக வந்த சிறிய ரக சரக்கு வாக​னத்தை நிறுத்தி சோதனை நடத்​தினர். அந்த வாக​னத்​தில் ரூ.245.50 கோடி மதிப்​புள்ள தங்க நகைகள் இருப்​பது தெரிய​வந்​தது‌.

உரிய ஆவணங்​கள் இல்​லாத​தால் நகையை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். ஓட்​டுநர் உள்​ளிட்ட 2 பேரிட​மும் விசா​ரணை நடத்​தினர். சென்னை சவு​கார்​பேட்​டை​யில் உள்ள பிரபல நகைக்​கடைகளில் இருந்து பல்​லா​வரத்​தில் உள்ள அலு​வல​கத்​துக்கு நகைகளை கொண்டு செல்​வ​தாக அவர்​கள் தெரி​வித்​தனர்.

நகைகளைக் கொண்டு செல்ல முறைப்​படி அனு​மதி பெற்​றுள்​ள​தாக​வும், ஆனால் அதற்​கான ஆவணங்​களை கொண்டு வரவில்லை என்​றும் கூறினர். இதையடுத்​து, உரிய ஆவணங்​களைக் காண்​பித்​து, நகைகளை திரும்ப பெற்​றுக் கொள்​ளலாம் என்று அவர்​களிடம் தெரி​வித்த அதி​காரி​கள், நகைகளை வரு​மான வரித் துறை​யினரிடம் ஒப்​படைத்​தனர்​.

SCROLL FOR NEXT