தமிழகத்​தில் மீன்​பிடித் தடைக்​காலத்​துக்​குப் பிறகு நேற்று ராமேசுவரத்தில் இருந்து ஆயிரக்கணக்​கான விசைப் படகு​கள் கடலுக்​குச் சென்​றன.

 
தமிழகம்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவு: 61 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: தமிழகத்​தில் 61 நாட்​கள் மீன்​பிடித் தடைக்​காலத்​துக்​குப் பிறகு நேற்று மீன்​பிடிக்க ஆயிரக்​கணக்​கான விசைப் படகு​களில் தமிழகம் முழு​வதும் மீனவர்​கள் நேற்று கடலுக்​குச் சென்​றனர்.

தமிழகத்​தில் வங்​காள விரி​கு​டா, மன்​னார் வளை​குடா மற்றும் பாக் நீரிணை பகு​தி​களில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்​கள் கடல் ​வாழ் உயி​ரினங்​களின் இனப்​பெருக்க கால​மாகும். இதனால் ஏப்​.15 முதல் ஜூன் 14 வரை மீன்​பிடிக்​கத் தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் நேற்​றுடன் இந்தத் தடைக்​காலம் முடிந்​த​தால் தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். இதன்ஒருபகுதியாக மண்​டபம் மற்​றும் ராமேசுவரத்​தில் இருந்து 800 விசைப்​படகு​களில் 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் 61 நாட்​களுக்கு பிறகு ஞாயிற்​றுக்​கிழமை முதல் கடலுக்குச் சென்​றனர்.

முன்​ன​தாக ராம​நாத​புரம் மீன்​வளத்​துறை விடுத்த செய்​திக்​குறிப்​பில், விசைப்​படகு மீனவர்​கள் அனு​மதி டோக்​கன் பெற்றே செல்ல வேண்​டும். மீறி​னால் படகு​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும் மீனவர்​களின் அடை​யாள அட்​டை, ஆதார் அட்டை நகலை கண்​டிப்​பாக எடுத்​துச் செல்ல வேண்டும். எல்லை தாண்டக் கூடாது. பாது​காப்பு உபகரணங்​களை எடுத்​துச் செல்ல வேண்​டும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT