மதுரை: மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் எதிர்ப்பை மீறி கடைசி நேரத்தில் களம் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் விஸ்நாதன், முதன்முதலாக வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளுக்கு முந்தைய நாளான ஏப்.5-ம் தேதி தான் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று நடந்த வாக்குப்பதிவு எண்ணிக்கையில் 58,419 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதல் நபராக அறிவிக்கப்பட்டார்.