தமிழகம்

தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கில் தீ விபத்து: கரும்புகையால் மக்கள் அவதி

செய்திப்பிரிவு

சென்னை: தண்​டை​யார்​பேட்​டை​யில் உள்ள பாரத் பெட்​ரோலிய நிறு​வனத்​தின் சேமிப்​புக் கிடங்​கில் ஏற்​பட்ட திடீர் தீயை, தீயணைப்பு வீரர்​கள் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக போராடி அணைத்​தனர்.

தண்​டை​யார்​பேட்​டை, வைத்​தி​ய​நாதன் மேம்​பாலம் அருகே பாரத் பெட்​ரோலிய நிறு​வனத்​தின் சேமிப்​புக் கிடங்கு உள்​ளது.

இங்கு 100-க்​கும் மேற்​பட்ட ஊழியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், நிறு​வனத்​தின் வளாகத்​தில் தேங்கி கிடந்த கழி​வுப் பொருட்​களில் நேற்று திடீரென தீப்​பிடித்​த​தாக கூறப்​படு​கிறது.

சிறிது நேரத்​தில் தீ மளமளவென பரவி, அரு​கில் இருந்த குடோன்​களுக்​கும் பரவியது. இதனால், அங்கு இருந்த கழி​வு​கள் தீப்​பிடித்து எரிந்​ததுடன், கரும்​புகை அதி​கள​வில் வெளி​யேறியது. அந்த புகை தண்​டை​யார்​பேட்டை சுற்​று​வட்​டார பகு​தி​கள் முழு​வதும் சூழ்ந்​தது.

இதனால், அப்​பகுதி பொது​மக்​களுக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல் போன்ற உடல் பாதிப்​பு​கள் ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதுகுறித்து தகவல் அறிந்​ததும், தண்​டை​யார்​பேட்​டை, கொருக்​குப்​பேட்​டை, வண்​ணாரப்​பேட்டை தீயணைப்பு நிலை​யங்​களில் இருந்து தீயணைப்பு வாக​னங்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​தன.

தீயணைப்பு வீரர்​கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 2 மணி நேரத்​துக்​கும் மேல் போராடி தீயை அணைத்​தனர் இதற்​கிடையே, சேமிப்​புக் கிடங்​கில் பணி​யாற்​றிய ஊழியர்​கள் அனை​வரும் உடனடி​யாக வெளி​யேற்​றப்​பட்​ட​தால் பெரும் அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​டது.

இந்த சம்​பவம் குறித்​து, தண்​டை​யார்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசா​ரித்து வரு​கின்​றனர். கரும்​புகை சூழ்ந்த சம்​பவம் அப்​பகுதி மக்களிடையே சிறிது நேரம் அச்சத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT