தமிழகம்

‘பத்ம ஸ்ரீ’ பாரதிராஜா காலமானார்: முதல்வர் விஜய், ஸ்டாலின், இளையராஜா, கமல், ரஜினி உள்ளிட்டோர் அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: உடல் நலக்​குறை​வால் வீட்​டிலேயே சிகிச்சை பெற்று வந்த இயக்​குநர் இமயம் பத்ம ஸ்ரீ பார​தி​ராஜா சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவர் உடலுக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இளை​ய​ராஜா, கமல், ரஜினி உட்பட ஏராளா​மானோர் அஞ்​சலி செலுத்​தினர். பார​தி​ராஜா​வின் உடலுக்கு இன்று அரசு மரி​யாதை​யுடன் இறு​திச் சடங்கு நடை​பெறுகிறது.

தமிழ் சினி​மா​வின் முன்​னணி இயக்​குநர்​களில் ஒரு​வர் பார​தி​ராஜா. இவருடைய மகன் மனோஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாரடைப்​பால் கால​மா​னார். அவருடைய திடீர் மரணத்​தைத் தாங்க முடி​யாமல் மனமுடைந்த பார​தி​ராஜா, உடல் நலம் பாதிக்​கப்​பட்​டார். பின்​னர் சிகிச்சை பெற்று மலேசி​யா​வில் வசிக்​கும் தனது மகள் ஜனனி​யுடன் சில மாதங்​கள் தங்கி இருந்​தார். அவருக்கு கடந்த டிசம்​பர் மாதம் மீண்​டும் உடல்​நலக் குறைவு ஏற்​பட்​டது. இதற்​காக சென்​னை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.

பின்​னர் நீலாங்​கரை​யில் உள்ள வீட்​டில் இருந்தே சிகிச்​சையை தொடர்ந்தார். வயது முதிர்வு காரண​மாக அவரது உடல்​நிலை கடந்த சில நாட்​களாக மோச​மானது. இந்​நிலை​யில், நேற்று அதி​காலை அவர் கால​மா​னார். அவரது மறைவு திரை​யுல​கினரை​யும் அவருடைய ரசிகர்​களை​யும் சோகத்​தில் ஆழ்த்​தி​யது.

அவருடைய உடல் நீலாங்​கரை வீட்​டில் பொது மக்​கள் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது. முதல்​வர் விஜய் நேரில் வந்து பார​தி​ராஜா​வின் உடலுக்கு மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தி​னார். அப்போது, பாரதிராஜா உடலை பார்த்து கண்ணீர் விட்டு விஜய் அழுதார்.

அவருடைய குடும்​பத்​தினருக்கு அவர் ஆறு​தல் கூறி​னார். அங்​கிருந்த நடிகை ராதிகா சரத்​கு​மாரைக் கட்​டிப்​பிடித்து ஆறு​தல் சொன்​னார். தொடர்ந்து திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், பார​தி​ராஜா உடலுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார். அமைச்​சர்​கள் ராஜ்மோகன், சி.டி.ஆர்​.நிர்​மல் குமார், எதிர்க்​கட்சி தலை​வர் உதயநி​தி, கனி​மொழி எம்​.பி., மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, அதி​முக அமைப்பு செய​லா​ளர் டி.ஜெயக்​கு​மார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்​பாளர் சீமான், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், விசிக துணை பொதுச் செய​லா​ளர் வன்​னியரசு, வி.கே.சசிகலா, நடிகர்​கள் ரஜினி​காந்த், கமல்​ஹாசன், மம்​முட்​டி, சிவகு​மார், நாசர், சூர்​யா, சித்​தார்த், நடிகைகள் சுகன்​யா, ராதா, சுஹாசினி, இசையமைப்​பாளர்​கள் இளை​ய​ராஜா, கங்கை அமரன், இயக்​குநர்​கள் மணிரத்​னம், ஆர்​.​வி.உதயகு​மார், ஷங்​கர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள், திரை​யுல​கினர், ரசிகர்​கள், பொது​மக்​கள் ஏராள​மானோர் பார​தி​ராஜா உடலுக்கு நேரில் அஞ்​சலி செலுத்​தினர்.

இன்று இறுதிச் சடங்​கு: அஞ்​சலிக்​குப் பிறகு பார​தி​ராஜா​வின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு நேற்று எடுத்து செல்​லப்​பட்​டது. அங்​கிருந்து வத்​தல​குண்டு அரு​கே​யுள்ள அவருடைய காட்​ரோட் தோட்​டத்​துக்கு எடுத்து செல்​லப்​பட்டு இன்று மாலை அவருடைய இறுதிச் சடங்கு நடக்​கிறது.

அரசு மரி​யாதை: தமிழக முதல்​வர் விஜய் எக்ஸ் வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழ்த் திரை​யுல​கின் இயக்​குநர் இமயம் பார​தி​ராஜா கால​மா​னார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை​யும் துயர​மும் அடைந்​தேன். கிராமியப் பின்​னணி​யில் வாழ்​வியல் உயிரோட்​டத்​துடன் பல வெற்​றிப் படங்​களை உரு​வாக்​கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்​கென தனி முத்​திரை பதித்​தவர் இயக்​குநர் பார​தி​ராஜா. தனது படைப்​பு​களுக்​காக நாட்​டின் உயரிய விரு​தான பத்​ம உள்​ளிட்ட பல்​வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்​றவர். பல தலை​முறை கலைஞர்​களை உரு​வாக்​கிய அவரது பங்​களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்​றில் என்​றென்​றும் நிலைத்​திருக்​கும்.

பார​தி​ராஜா​வின் மறைவு, தமிழ்த் திரை​யுல​குக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்​பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்​கும், நண்​பர்​களுக்​கும், திரைப்​படத் துறையினருக்​கும், ரசிகர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். அவரது ஆன்மா இறைவன் திரு​வடி நிழலில் இளைப்​பாற பிரார்த்​திக்​கிறேன். திரைத்​துறை​யில் பாரதிராஜா​வின் பங்​களிப்​பைப் போற்​றி, அஞ்​சலி செலுத்​தும் வகை​யில் அவரது இறு​திப் பயணத்​துக்கு அரசு மரி​யாதை வழங்கப்​படும். இவ்​வாறு முதல்​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார்.

பார​தி​ராஜா மறைவுக்கு குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், அமைச்​சர்​கள்​, ​மாநில முதல்​வர்கள்​ உட்​பட ஏ​ராள​மான பிரமுகர்​கள்​ இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT