ரவி, அய்யனார்

 
தமிழகம்

சவுகார்பேட்டையில் கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் கிணற்றை தூர்​வாரும் பணி​யில் ஈடு​பட்ட தந்​தை​யும், மகனும் விஷ​வாயு தாக்கி உயி​ரிழந்த சம்​பவம் அப்​பகு​தி​யில் சோகத்தை ஏற்​படுத்தி உள்​ளது.

விழுப்​புரம் மாவட்​டம் செஞ்சி அருகே உள்ள மழவந்​தாங்​கல் கிராமத்தை சேர்ந்​தவர் ரவி (65). இவரது மகன் அய்​ய​னார் (35). இரு​வரும் சென்னை கொடுங்​கையூர் பகு​தி​யில் குடும்​பத்​துடன் தங்​கி, கடந்த 15 ஆண்​டு​களாக கிணறு தூர்​வாரும் தொழிலில் ஈடு​பட்டு வந்​தனர்.

இந்​நிலை​யில், நேற்று காலை சவு​கார்​பேட்டை பொன்​னப்​பன் தெரு​வில் உள்ள ஒரு வீட்​டின் பின்​புறம் இருந்த சுமார் மூன்​றரை அடி அகல​மும், 45 அடி ஆழமும் கொண்ட கிணற்றை தூர்​வாரு​வதற்​காக தந்​தை​யும், மகனும் சென்​றனர்.

முதலில் அய்​ய​னார் கிணற்​றுக்​குள் இறங்கி பணி​யில் ஈடு​பட்​டார். நீண்ட நேர​மாகி​யும் அவர் வெளியே வரவில்​லை. மேலும், அவரிடம் இருந்து எந்த சத்​த​மும் கேட்​காத​தால் ரவி அதிர்ச்சி அடைந்​தார்.

இதையடுத்து மகனை பார்ப்​ப​தற்​காக அவரும் கிணற்​றுக்​குள் இறங்​கி​னார். அப்​போது ரவி​யும் மயங்கி கிணற்​றுக்​குள் விழுந்​தார். கிணற்​றுக்​குள் தேங்​கி​யிருந்த விஷ​வாயு தாக்​கிய​தால் இரு​வரும் மயங்கி விழுந்​திருக்​கலாம் என கூறப்​படு​கிறது.

நீண்ட நேர​மாகி​யும் தந்​தை-மகன் இரு​வரும் வெளியே வராத​தால் சந்​தேகம் அடைந்த வீட்​டின் உரிமை​யாளர் உடனடி​யாக தீயணைப்​புத்​துறைக்கு தகவல் தெரி​வித்​தார். இதையடுத்து 5 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்​கள் குழு​வினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​தனர்.

கிணற்​றுக்​குள் இறங்​கு​வது ஆபத்​தான சூழ்​நிலை இருந்​த​தால், உரிய பாது​காப்பு உபகரணங்​களை அணிந்​து​கொண்டு மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது கிணற்​றுக்​குள் ரவி மற்​றும் அய்​ய​னார் இரு​வரும் சடல​மாக கிடந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்து இரு​வரது உடல்​களை​யும் தீயணைப்பு வீரர்​கள் மீட்டு வெளியே கொண்டு வந்​தனர். இதுகுறித்து யானைக​வுனி போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இரு​வரது உடல்​களும் பிரேத பரிசோதனைக்​காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

SCROLL FOR NEXT