தமிழகம்

வேளாண் விளைபொருட்கள் விலை மறுஆய்வு செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: மத்​திய அரசு 2026-27 கரீப் பரு​வத்​துக்கு 14 வேளாண் உற்​பத்தி பயிர்​களுக்கு அறி​வித்​துள்ள குறைந்​த​பட்ச ஆதரவு விலை​யானது வழக்​கம் போல் விவ​சா​யிகளை ஏமாற்​றும் செய​லாகவே உள்​ளது.

கடந்த 16 ஆண்​டு​களாக போராடிவரும் விவ​சா​யிகளின் அடிப்​படை கோரிக்​கை​யான, வேளாண் ஆணை​யத் தலை​வர் எம்​.எஸ்​.சு​வாமி​நாதனின் பரிந்​துரை​யான ‘சி 2 + 50’ (சாகுபடி செல​வுடன் 50 சதவீத லாபம்) என்ற முறையி​லான விலை நிர்​ண​யத்தை இந்த முறை​யும் பாஜக அரசு அறிவிக்​க​வில்​லை.

மாறாக, ‘சி 1 + 50’ என்ற முறையை அறி​வித்​து​விட்​டு, அது​தான் உண்​மை​யான பரிந்​துரை என்று விவ​சா​யிகளை வஞ்​சிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. கடந்த 2004-14 வரையி​லான 10 ஆண்​டு​களில் 4,590 லட்​சம் டன்​களாக இருந்த கொள்​முதல், 2014-26 கால​கட்​டத்​தில் 8,418 லட்​சம் டன்​களாக உயர்ந்​துள்​ளது.

இச்சூழலில், அதற்​கான உரிய விலை உயர்வை வழங்​காமல், நெல் குவிண்​டாலுக்கு வெறும் ரூ.72 மட்​டுமே உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இதன் மூலம், சாதாரண ரக நெல் குவிண்​டாலுக்கு ரூ.2,441 ஆகவும், சன்ன ரக நெல் ரூ.2,461 ஆகவும் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.

வேளாண் ஆணை​யத்​தின் பரிந்​துரைப்​படி, அனைத்து விளைபொருட்​களுக்​கும் ‘சி 2 + 50’ என்ற அடிப்​படை​யில் விலையை மறுஆய்வு செய்து அறிவிக்க வேண்​டும் என அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT