தமிழகம்

“நாடாளுமன்றம் கூட்டப்படுவதை முதல்வர் எதிர்க்க தோல்வி பயமே காரணம்” - இபிஎஸ்

செய்திப்பிரிவு

நா​டாளு​மன்​றத்​தில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு கொண்​டு​வ​ரு​வதை ஸ்டா​லி​னால் பொறுத்​துக்​கொள்ள முடிய​வில்​லை. தேர்​தல் தோல்வி பயம் காரண​மாக நாடாளு​மன்​றம் கூட்​டப்​படு​வதை ஸ்டா​லின் எதிர்க்​கி​றார் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

திண்​டுக்​கல்​லில் நேற்று முன்​தினம் பிரச்​சா​ரத்தை முடித்த அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிச்​சாமி அன்று இரவு திண்​டுக்​கல்​லில் உள்ள தனி​யார் ஹோட்​டலில் தங்​கி​னார். நேற்று அம்​பேத்​கர் பிறந்த நாளை​யொட்​டி, அவரது உரு​வப்​படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செய்​தார். தொடர்ந்து கட்சி நிர்​வாகி​களை சந்​தித்​தார். தேர்​தல் பணி​கள், பிரச்​சார வியூ​கங்​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார். மாலை​யில் தேனி, மதுரை மாவட்​டங்​களில் பிரச்​சா​ரம் செய்​தார்.

          

முன்​ன​தாக, பெண்​களுக்கு நாடாளு​மன்​றத்​தில் 33 சதவீத இடஒதுக்​கீடு செய்​வதற்​காக 3 தினங்​கள் நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டம் வேண்​டுமென்றே கூட்​டப்​படு​கிறது என முதல்​வர் ஸ்டா​லின் கூறி​யுள்​ளது குறித்து பழனி​சாமி​யிடம் செய்​தி​யாளர்​கள் கேள்வி எழுப்​பினர். அதற்கு அவர் அளித்த பதி​லில் கூறிய​தாவது: முதல்​வர் ஸ்டா​லினுக்கு தேர்​தலில் தோல்வி பயம் ஏற்​பட்டு விட்​டது. தோல்வி பயத்​தின் வெளிப்​பாடு​தான் அவர் கூறி​யுள்​ளது.

பாராளு​மன்​றத்தை கூட்​டு​வது மத்​தி​யில் உள்ள ஆட்​சி​யாளர்​கள். 5 மாநிலங்​களில்​தான் தேர்​தல் நடக்​கிறது. மற்ற மாநிலங்​களில் தேர்​தல் இல்​லை. பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு என்​பது நீண்​ட​நாள் கோரிக்​கை. அந்த கோரிக்​கையை நிறை​வேற்ற இப்​பொழுது அரு​மை​யான தருணம். அதை ஸ்டா​லி​னால் பொறுத்​துக்​கொள்ள முடிய​வில்​லை.

பெண்​களுக்​கான 33 சதவீத இடஒதுக்​கீடு பெண்​கள் பல ஆண்​டு​களாக எதிர்​பார்த்த ஒன்​று. இன்று அது நிறை​வேறும் சூழ்​நிலை. அதை அவரால் ஜீரணிக்க முடிய​வில்​லை. இதனால், தேர்​தலில் பெண்​கள் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு கிடைத்து விடுமோ என்று ஸ்டா​லின் பயப்​படு​கி​றார். அதனால் அவரது கருத்தை ஊடகம் வாயி​லாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

மத்​திய அரசு பெண்​களின் கோரிக்​கைளை நிறை​வேற்​றும் வித​மாகவே நாடாளு​மன்​றத்தை கூட்​டி​யுள்​ளது. தேர்​தல் தோல்வி பயம் காரண​மாக பெண்​கள் இடஒதுக்​கீட்​டுக்​காக நாடாளு​மன்​றம் கூட்​டப்​படு​வதை ஸ்டா​லின் எதிர்க்​கி​றார்.இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT