தமிழகம்

நில அளவைத் துறையில் நிர்வாக பணிகளுக்கு லஞ்சம்: நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: நில அளவைத்​துறை​யில் பதவி உயர்​வு, பணி​யிட மாறு​தல் தொடங்கி பல்​வேறு நிர்​வாகப் பணி​களுக்கு லஞ்​சம் வசூலிக்​கப்​படு​வ​தாக அதன் ஊழியர்​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் அவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுகுறித்து, அரசு நில அளவைத் துறை ஊழியர்​கள் சிலர் கூறிய​தாவது: பதவி உயர்வு பெறும் அலு​வலர்​களுக்கு அரு​கில் உள்ள வட்​டங்​களில் பணிவழங்க ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இடத்​துக்​கேற்ப பணம் கொடுக்க வேண்​டும். இல்​லை​யெனில் தொலை​தூரங்​களில் உள்ள வட்​டங்​களில் பணி செய்​யும் சூழ்​நிலைக்கு தள்​ளப்​படு​கிறார்​கள் அல்​லது ஏதேனும் காரணம் காட்டி பதவி உயர்வு தள்​ளிப்​போடப்​படு​கிறது.

இதுத​விர, மாவட்​டம்​விட்டு மாவட்​டம் பணி​யிட மாறு​தல் பெறும் நபர்​களிடம் இருந்து 3 முதல் 6 மாதம் வரை சம்​பளம் போடா​மல் வைத்து பணம் கொடுத்​தால்​தான் சம்​பளம் போடும் சூழலுக்கு தள்​ளப்​படு​கின்​றனர்.

வேறு ஏதும் அரசுப் பணிக்கு தடை​யில்​லாச் சான்று கேட்டு விண்​ணப்​பித்​தால் அதற்​கும் பணம் கொடுக்க வற்​புறுத்​துகிறார்​கள். துறை அலு​வலர்​கள் பாதிப்பு அதே​போல், பல்​வேறு மாவட்​டங்​களில் லஞ்​சம் பெறாமல் நேர்​மை​யாக செயல்​படும் அலு​வலர்​களுக்கு பணி​யிட மாற்​றம் அளிக்​கப்​படு​கிறது.

அவர்​கள் பணி​யில் சிறு தவறு செய்​தால்​கூட துறைரீ​தி​யாக நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. இத்​தகைய சிக்​கல்​களால் அளவைத் துறை அலு​வலர்​கள் பெரிதும் பாதிக்​கப்​படு​கிறார்​கள். இவற்றைக் களைய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT