தமிழகம்

மின் வாரிய இணைய சேவைகள் இன்றும், நாளையும் இயங்காது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மின் வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: நுகர்​வோருக்கு மேம்​பட்ட மற்​றும் விரை​வான சேவை​களை வழங்​கும் நோக்​கில், தமிழ்​நாடு மின் பகிர்​மானக் கழகம் தனது தாழ்​வழுத்த பில்​லிங் மென்​பொருளை புதிய சர்​வர்​கள் மற்​றும் தரவு​களை புதிய தரவுத்​தளத்​துக்கு ஏற்​ற​வாறு மேம்​படுத்​தும் பணி​களை பல கட்​டங்​களாக மேற்​கொண்டு வரு​கிறது.

இதன் காரண​மாக, அடை​யார் மின்​பகிர்​மான வட்​டத்​தின் அடை​யார், ஐ.டி காரி​டார், தாம்​பரம், பல்​லா​வரம் மற்​றும் சோழிங்​கநல்​லூர் கோட்​டங்​கள், சென்னை தெற்கு மின் பகிர்​மான வட்​டத்​தின் கே.கே.நகர், போரூர், கிண்டி கோட்​டங்​கள் மற்​றும் சென்னை மேற்கு மின் பகிர்​மான வட்​டத்​தின் அண்​ணாநகர், அம்​பத்​தூர், ஆவடி கோட்​டங்​கள் ஆகிய​வற்​றின் மின் நுகர்​வோர்​கள் மின் கட்டண வசூல் தொடர்​பான கவுண்​டர் மற்​றும் ஆன்​லைன் சேவை​கள், புதிய மின் இணைப்பு விண்​ணப்ப சேவை​கள் ஆகியவை இன்று (மே 23) முதல் நாளை (மே 24) இரவு 12 மணி வரை தற்​காலிக​மாக இயங்​காது. பணி​கள் நிறைவடைந்​தவுடன் அனைத்து சேவை​களும் மீண்​டும் செயல்​படுத்​தப்​படும்.

SCROLL FOR NEXT