கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் 2023-ம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் தேர்தல் நடத்தப்படவில்லை.
தவெக ஆட்சிக்கு வந்தபின்பு கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, கூட்டுறவுச் சங்கங்களுக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்க கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான ஒட்டுமொத்த தேர்தல்கள் 5 கட்டங்களாக நடைபெற உள்ளன.
அதன் அடிப்படையில் முதல்கட்டமாக 38 மண்டலங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சங்கங்களின் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் மொத்தம் 7,405 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டிய கூட்டுறவுச் சங்கங்களின் விவரங்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிட்டு, ஆணையத்துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது. இதன்மூலம், விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.