தமிழகம்

மறு எண்ணிக்கை நடத்த தேர்தல் அதிகாரிக்கு அதிகாரமில்லை: பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தொகுதி மாறி அனுப்​பப்​பட்ட தபால் வாக்கை மீட்டு மறு எண்​ணிக்கை நடத்த தேர்​தல் அதி​காரிக்கு அதி​காரமில்​லை’ என உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் ஆணை​யம் விளக்​கமளித்​துள்ளது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகுதி திமுக வேட்​பாள​ரான முன்​னாள் அமைச்​சர் கே.ஆர்​.பெரியகருப்​பன் ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் தவெக வேட்​பாளர் சீனி​வாச சேதுப​தியிடம் தோல்​வியடைந்​தார் அதையடுத்து மறு​வாக்கு எண்ணிக்கை முறை​யாக நடை​பெற​வில்லை என அவர் வழக்கு தொடர்ந்​தார்.

அதில், “எனது தொகு​திக்கு பதி​வான ஒரு தபால் வாக்கை அதி​காரி​கள் தவறு​தலாக வேலூர் அரு​கே​யுள்ள திருப்​பத்​தூர் தொகு​திக்கு மாற்றி அனுப்பி விட்​டனர்.

எனவே அந்த தபால் வாக்கை மீட்டு மறு எண்​ணிக்கை நடத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும், அது​வரை சீனி​வாச சேதுபதி சட்​டப்​பேர​வை​யில் நடை​பெறும் நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பங்​கேற்க தடை விதிக்க வேண்​டும்” என கோரி​யிருந்தார்.

இந்த வழக்கை ஞாயிறன்று விசா​ரித்த நீதிப​தி​கள் எல்​.விக்​டோரியா கவுரி, என்​.செந்​தில்​கு​மார் அமர்வு, இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் விளக்​கமளிக்க உத்​தர​விட்​டிருந்​தனர்.

அதன்​படி இந்த வழக்​கில் தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தாக்​கல் செய்​துள்ள பதில்​மனு​வில், “தேர்​தல் முடிவுக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்​கு​தான் தொடர முடி​யும்.

அந்த தேர்​தல் வழக்கை விசா​ரிக்கும் உயர்நீதி​மன்​றம்​தான் அத்​தொகு​தி​யின் தேர்​தல் வெற்றி செல்​லுமா, செல்​லாதா என்​பதை தீர்​மானிக்​கும். அதைத் தவிர்த்து ரிட் வழக்கு தொடர்ந்து இதற்கு பரி​காரம் தேட முடி​யாது.

இதை மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​ட​மும், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களும் உறுதி செய்​துள்ளன. சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​திக்கு பதி​வான தபால் வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்​டுக்கு எந்த ஆதா​ர​மும் இல்​லை.

மேலும் தேர்​தல் முடிவு அறிவிக்​கப்​பட்ட பிறகு ஒரு தொகு​தி​யில் எண்​ணப்​பட்ட தபால் வாக்கை வேறு தொகு​திக்கு அனுப்பி வைக்​க​வும் முடி​யாது.

அதே​போல தேர்​தல் முடிவு அறிவிக்​கப்​பட்ட பிறகு வேறு தொகு​திக்கு அனுப்​பப்​பட்ட தபால் வாக்கை மீட்​டு, மறு எண்​ணிக்கை நடத்​தக் கோரும் மனு மீது முடி​வெடுக்க சம்​பந்​தப்​பட்ட தேர்​தல் அதி​காரிக்​கும் அதி​காரம் இல்​லை.

ஒரே பெயர் கொண்ட தொகு​தி​களுக்​கான வாக்​கு​களை கையாளும்​போது தேர்​தல் அதி​காரி​கள் மிகுந்த எச்​சரிக்கை உணர்​வுடன் செயல்பட ஏற்​கெனவே அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன் காரண​மாகவே தபால் வாக்​கு​களில் தொகுதி எண் குறிப்​பிடப்பட்டு சம்​பந்​தப்​பட்ட தொகு​தி​களுக்கு அனுப்பி வைக்​கப்​படு​கின்​றன. தபால் வாக்கு வேறு தொகு​திக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​தாக கற்​பனை​யாக கூறப்​படும் குற்​றச்​சாட்டு அடிப்​படை ஆதா​ரமற்​றது.

எனவே இந்த வழக்கை அபராதத்​துடன் தள்​ளு​படி செய்ய வேண்​டும்” எனக் கோரப்​பட்​டிருந்​தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலனும், பெரியகருப்பன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளி​வைத்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT