எம்.பி. ரவிக்குமார் | கோப்புப்படம் 
தமிழகம்

மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விஜய் விருப்பம்: துரை ரவிக்குமார் எம்.பி. தகவல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: அறு​திப் பெரும்​பான்மை இல்​லாத சூழலில், தவெக சார்​பில் ஆதரவு கேட்டு விசிக​வுக்கு கடிதம் வந்​துள்​ளது. மதச்​சார்​பற்ற கட்​சிகள் ஆதர​வுடன் ஆட்​சி​யமைக்க விஜய் உறு​தி​யாக இருக்​கிறார் என்று விசிக பொதுச்​செயலர் ரவிக்​கு​மார் தெரி​வித்​தார்.

புதுச்சேரி​யில் மத்​திய அரசின் மும்​மொழி கொள்​கைக்கு எதி​ராக​ நடந்த விசிக ஆர்ப்​பாட்​டத்தில் பேசிய ரவிக்குமார் பின்னர் நடத்​தினர். இதற்கு புதுச்​சேரி விசிக முதன்மை செயலர் அரி​மாத் தமிழன் தலைமை வகித்​தார். கட்​சி​யின் பொதுச்​செயலரும் விழுப்​புரம் எம்​.பி.​யு​மான துரை ரவிக்​கு​மார் கண்டன உரை​யாற்​றி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: இந்தியை கட்​டா​யம் படிக்க வேண்​டும் என்று புதுச்​சேரி மக்​களிடம் திணித்​துள்​ளனர். மும்​மொழி கொள்​கையை நாங்​கள் ஏற்​ப​தில்​லை. இரு மொழி கொள்​கையே சரியானது. பாஜக கூட்​டணி அமைத்த பிறகு அவர்​கள் அழுத்​தத்​துக்கு ரங்​க​சாமி பணிந்​து, நம் மக்​களின் மொழி உரிமையை விட்டு கொடுத்​துள்​ளார்.

மும்​மொழி கொள்​கை​யில் மூன்​றாவது மொழி​யாக பிரெஞ்சு இருக்​கும் என்​ப​தால் அமை​தி​யாக இருந்​தோம். மும்​மொழி கொள்கை என்​பதே இந்தி திணிப்​பின் தந்​திரம் என்​பதை பாஜக நிருபித்​துள்​ளது. இதனால்​தான் தமிழகத்​தில் மும்​மொழி கொள்​கையை ஏற்​க​மாட்​டோம் என திமுக அரசு உறு​தி​யாக இருந்​தது.

புதுச்​சேரி அரசு அரசாணையை திரும்பப் பெற வேண்​டும். பிரெஞ்சு படிக்க ஏற்​பாடு செய்​து, இந்தி திணிக்​கும் முயற்​சிக்கு அரசு உடந்​தை​யாக இருக்கக் கூடாது. இந்​தி​யைத் திணித்தால் மிகப்​பெரிய மொழி போராட்​ட​மாக மாறும். மேலும் ஆட்சி அமைக்க காங்​கிரஸ், இடது​சா​ரி​கள் விசிக ஆதரவை தவெக கேட்​டுள்​ளது. இதுதொடர்​பாக எங்​கள் தலை​வர் உரிய விளக்​கம் அளிப்​பார். இது​வரை தவெக மதச்சார்​பற்ற கட்​சிகள் ஆதர​வுடன் ஆட்சி அமைக்க உறு​தி​யாக இருக்​கிறது. அதனால்​தான் காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆதரவை அவர்​கள் கோரி​யுள்​ளனர் என்​றார்.

SCROLL FOR NEXT