தமிழகம்

கூட்டணி அமைப்பது தொடர்பாக டிடிவி.தினகரனுக்கு அழுத்தமா? - அமமுக விளக்கம்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அ​தி​முக பாஜக கூட்​ட​ணி​யில் அமமுக இணை​ய​லாம் என்று தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன. இந்​நிலை​யில், அமமுக தலைமை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 5ஆம் தேதி தஞ்​சாவூரில் நடை​பெற்ற கழக செயற்​குழு மற்​றும் பொதுக்​குழுக் கூட்​டத்​தில், கூட்​டணி விவ​காரத்​தில் தமி​ழ​கத்​தின் நலன் மற்​றும் கழகத்​தின் நலனை மைய​மாகக் கொண்டே கூட்​டணி அறிவிக்​கப்​படும் என்​பதை பொதுச்​செய​லா​ளர் அவர்​கள் தெள்​ளத் தெளி​வாகக் குறிப்​பிட்​டுள்​ளார். அந்​தச் செய்தி அனைத்து ஊடகங்​களி​லும், சமூக வலைத்​தளங்​களி​லும் வெளி​யானது.

இந்​தச் சூழலில் சில ஊடகங்​கள், கூட்​டணி விவ​காரத்​தில் தயக்​கம், குழப்​பம், அழுத்​தம் என பொய்ப் பிரச்​சா​ரம் செய்து வரு​வதோடு, கடந்த சில தினங்​களாக கழக நிகழ்ச்​சிகளில் பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் கலந்​து​கொள்​ள​வில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வரு​கின்​ற​னர்.

பொதுக்​குழு நிகழ்ச்​சிக்​குப் பின்​பாக, சொந்த வேலை​கள் காரண​மாக​வும், பொங்​கல் பண்​டிகை நாட்​கள் வரு​வ​தா​லும் எந்த நிகழ்ச்​சிகளுக்​கும் திட்​ட​மிடப்​பட​வில்​லை. அதே நேரத்​தில், கூட்​டணி தொடர்​பாக டிடிவி தினகரனுக்கு எந்​தவொரு தயக்​க​மும், குழப்​ப​மும், அழுத்​த​மும் இல்லை என்​ப​தைத் தெரி​வித்​துக் கொள்​வதோடு, உரிய நேரத்​தில் கூட்​டணி தொடர்​பான நிலைப்​பாட்​டினை அறி​விப்​பார் என்​ப​தை​யும் தெரி​வித்​துக்​கொள்​கி​றோம்.

வரு​கின்ற 17ஆம் தேதி எம்​.ஜி.ஆரின் 109வது பிறந்​த​நாள் விழா அன்று சென்​னை, அண்​ணா​சாலை​யில் அமைந்​துள்ள எம்​ஜிஆரின் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​துகின்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று நிர்​வாகி​களை​யும், தொண்​டர்​களை​யும் சந்​திக்​க​வுள்​ளார். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT