தமிழகம்

மது விருந்து விவகாரம்: 4 மருத்துவர்கள் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்​டம் கல்​லலைச் சேர்ந்த தயாளன் (29) என்​பவர் டிச. 31-ம் தேதி நள்​ளிரவு நேரிட்ட விபத்​தில் காயமடைந்​தார். அவரை, நண்​பர் அரசு அரு​கே​யுள்ள செம்​பனூர் ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றார். அங்கு மருத்​து​வர்​கள், பணி​யாளர்​கள் இல்​லாத நிலை​யில், அவர்​களைத் தேடி​னார்.

அப்​போது, மருத்​து​வர் ஓய்​வறை​யில் வெளி​நாட்டு ரக மது பாட்​டில், அசைவ உணவு​கள், நொறுக்​குத் தீனிகள் சிதறிக் கிடந்​தன. அவற்றை செல்​போன் மூலம் வீடியோ எடுத்த அரசு, சமூகவலை​தளங்​களில் பதி​விட்​டார். இது தொடர்​பாக மாவட்ட சுகா​தார அலு​வலர் மீனாட்சி விசா​ரணை நடத்​தி​ய​தில், மது விருந்​துடன் புத்​தாண்​டைக் கொண்​டாடியது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, இரவுப் பணி​யில் இருந்த மருத்​து​வர் சசி​காந்த், விருந்​தில் பங்​கேற்ற மருத்​து​வர்​கள் கவுசிக், நவீன்​கு​மார், மணிரத்​னம், மருந்​தாளுநர் கமலக்​கண்​ணன் ஆகிய 5 பேரை​யும் பணி​யிடை நீக்​கம் செய்து மாவட்டசுகா​தார அலு​வலர் மீனாட்சி உத்​தர​விட்​டார். மேலும், இரவுப் பணி​யில் இருந்த செவிலியர், மருத்​து​வப் பணி​யாள​ருக்கு விளக்​கம் கேட்டு நோட்​டீஸ்​ அனுப்​பி​னார்​.

SCROLL FOR NEXT