தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: அமைச்சரை சந்தித்து மருத்துவர்கள் மனு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களை அதி​கரிக்க வேண்​டும் என்​று, சுகா​தா​ரத்​ துறை அமைச்​சர் அருண்​ராஜை சந்​தித்து அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை மனு அளித்​தனர்.

சென்​னை, தலைமை செயல​கத்​தில், தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜை அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை தலை​மை​யில், அரசு மருத்​து​வர்​கள் சந்​தித்து பேசினர். அப்​போது, சுகா​தா​ரத்​துறை தொடர்​பான கோரிக்கை மனு ஒன்றை அமைச்​சரிடம் வழங்​கினர்.

அந்த மனு​வில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: சுகா​தா​ரத் துறை​யில் தமிழகம் முன்​மா​திரி மாநில​மாக திகழ்​கிறது. சுகா​தா​ரக் குறி​யீடு​களான மகப்​பேறு இறப்பு விகிதம் மற்​றும் குழந்​தைகள் இறப்பு விகிதத்தை வெகு​வாக குறைத்து வரு​கின்​றோம்.

இருப்​பினும், தமிழகத்​துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்​து​வர்​களுக்​கு, நாட்​டிலேயே குறை​வான ஊதி​யம் தந்து அவமானப்​படுத்தி வரு​வது வேதனையளிக்​கிறது. இந்த கோரிக்​கைக்​காக கிட்​டத்​தட்ட 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக போராடி வரு​கிறோம்.

அது​வும், சுதந்​திர இந்​தி​யா​வில் அரசு மருத்துவர்களை தங்​கள் ஊதி​யத்துக்​காக தொடர்ந்து போராட வைக்​கும் ஒரே மாநில​மாக தமிழகம் உள்​ளது. அதனால், அரசு மருத்​து​வர்​களுக்கு அரசானை 354-ன்​படி ஊதி​யம் வழங்க வேண்​டும்.

கரோனா பேரிடரில் பணி​யாற்றி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனை​விக்கு அரசு வேலைக்​கான ஆணை வழங்க வேண்​டும்.

அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் 15 ஆண்​டு​களுக்​கும் மேலாக ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்றி வரும் 400 பல் மருத்​து​வர்​களுக்கு பணி நிரந்​தரம் வழங்க வேண்டும்.

தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்கை 3 மடங்கு அதி​கரித்​துள்​ளது. கடந்த 15 ஆண்​டு​களாக மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களை அதி​கரிக்​கப்​ப​டாத​தால், மருத்​து​வர் மட்​டுமன்​றி, மக்​களுமே பாதிக்​கப்​படு​கின்​றனர்.

அதனால், நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்பட மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களை அதி​கரிக்க வேண்​டும். அனைத்து அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களி​லும், பல் மருத்​து​வர் இருப்​பதை அரசு உறுதி செய்ய வேண்​டும்.

கடந்த திமுக ஆட்​சி​யில் அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கையை முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​லும் வகை​யில், பாத​யாத்​திரையை முன்​னெடுத்து சென்ற மருத்​து​வர் சங்க தலை​வர் மருத்​து​வர் பெரு​மாள் பிள்​ளைக்கு தரப்​பட்ட 17-பி குற்ற குறிப்​பாணையை ரத்து செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT