சென்னை: நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழர்களை அடையாளம் காண சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இலவச டிஎன்ஏ பரிசோதனைக்கு தமிழகஅரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக அவர்களின் முதல்நிலை உறவினர்களான தாய், தந்தை, மகன் அல்லது மகள் ஆகியோர் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூரில் உள்ள மண்டல தடய அறிவியல் ஆய்வகங்கள் மூலம் கட்டணமின்றி டிஎன்ஏ பரிசோதனை செய்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, விவரங்களை நேபாள அரசு இணையதளத்தில் பதிவேற்றுவார்கள்.
சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் தடய அறிவியல் துறை இயக்குநர் காஜா மொய்தீன்– 9941464808, மதுரை மண்டலத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி துணை இயக்குநர் விஜயேந்திரன்– 8637674451, தஞ்சாவூர் மண்டலத்தில் வல்லம் சாலை பிள்ளையார்பட்டி துணை இயக்குநர் ராஜ்மோகன்- 9791112894 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
உறவினர்கள் நேபாளம் செல்லத் தேவையான உதவிகள், கூடுதல் விவரங்களுக்கு சேப்பாக்கத்தில் உள்ள அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை ஆணையரகத்திலும் 18003093793 / 8069009901 / 8069009900 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.