கொமதேக பொதுச்​ செய​லா​ளர் ஈஸ்வரன்

 
தமிழகம்

தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: கொமதேக ஈஸ்வரன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: திமுக அதிக தொகு​தி​களில் வெற்றி பெற்று தனிப்​பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும் என்று கொமதேக பொதுச்​செய​லா​ளர் ஈஸ்வரன் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் உள்ள 234 சட்​டப்​ பேரவை தொகு​தி​களுக்​கான தேர்​தல் முடிந்​துள்ள நிலை​யில், மாநிலம் முழு​வதும் 62 மையங்​களில் நாளை (4-ம் தேதி) வாக்கு எண்​ணிக்கை நடக்​கிறது. தேர்​தலில் திமுக மற்​றும் கூட்​டணி கட்​சிகள் சார்​பில் போட்​டி​யிட்ட வேட்​பாளர்​கள், கடந்த 2 தினங்​களாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை மரி​யாதை நிமித்​த​மாக சந்​தித்து வரு​கின்​றனர்.

அந்​தவகை​யில், முதல்​வர் ஸ்டா​லினை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், சாக்​கோட்டை அன்​பழகன் உள்​ளிட்ட திமுக வேட்​பாளர்​கள் மற்​றும் கூட்​ட​ணி​யில் உள்ள தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, கொங்​கு​நாடு மக்​கள் தேசிய கட்சி பொதுச்​செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன் ஆகியோர் சந்​தித்​துப் பேசினர்.

அர்​களிடம் வெற்றி வாய்ப்​பு, தொகுதி நில​வரம் குறித்து கலந்​துரை​யாடிய முதல்​வர் ஸ்டா​லின், வாக்கு எண்​ணிக்கை நாளில் கவன​மாக செயல்​பட​வும் உத்​தர​விட்​டார். இந்த நிகழ்​வில் அமைச்​சர் டி.ஆர்​பி.​ராஜா, எம்பி ஆ.ரா​சா, அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, செய்​தித் தொடர்பு தலை​வர் டி.கே.எஸ்​.இளங்​கோவன் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வரை சந்​தித்த பிறகு செய்​தி​யாளர்​களிடம் கொமதேக பொதுச்​செய​லா​ளர் ஈஸ்​வரன் கூறும்​போது, “தி​முக கூட்​டணி வெற்றி பெறு​வது உறு​தி. கருத்​துக்​கணிப்​பு​களை தாண்டி இன்​னும் அதி​க​மான தொகு​தி​களில் வெற்றி பெற்​று, தனிப் பெரும்​பான்​மை​யுடன் திமுக ஆட்சி அமைக்​கும். அப்​படிப்​பட்ட நில​வரங்​களை​தான் களத்​தில் நாங்​கள் பார்த்​தோம்.

அதி​முக பலவீன​மாக இருப்​ப​தால் அந்த வாக்​கு​கள் தவெகவுக்கு செல்​வதற்​கான வாய்ப்​பு​கள் உள்​ளது. அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜகவை விரும்​பாதவர்​களும் உள்​ளனர். அவர்​களும்​கூட தவெக​வுக்கு வாக்கு அளித்​திருக்​கலாம்” என்று தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT